Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை
    தேசியம்

    பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெங்களூரு காவல் துறை ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: சித்தராமையா நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா.

    கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் புதன்கிழமை அன்று மாலை பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆர்சிபி வீரர்கள் பங்கேற்றனர். இந்த விழாவை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் உள்ளே நுழைய முயன்ற காரணத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களை முதல்வர் சித்தராமையா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    “இது மாதிரியான அசம்பாவிதம் எதிர்பாராத ஒன்று. இதில் 11 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. 56 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அரசு தரப்பில் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூரு காவல் ஆணையர், கூடுதல் ஆணையர் உட்பட காவல் துறையின் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிரதிநிதிகளை கைது செய்ய முடிவு செய்துள்ளோம். அவர்களின் அலட்சியம் தான் இதற்கு காரணம். இது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு” என அவர் கூறினார்.

    பெங்களூரு காவல் ஆணையர், கூடுதல் ஆணையர், கப்பன் பார்க் காவல் நிலையில் பொறுப்பு அதிகாரி உட்பட காவல் துறையின் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கர்நாடக மாநில அரசு ரூ.10 லட்சம், ஆர்சிபி அணி ரூ.10 லட்சம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேர்தலுக்காக வாக்காளர்களைக் கவர கால்பந்து போட்டி நடத்தும் திரிணமூல், பாஜக

    September 13, 2025
    தேசியம்

    நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்: பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து 

    September 13, 2025
    தேசியம்

    இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

    September 13, 2025
    தேசியம்

    பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்க கூடாது? – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி 

    September 13, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு செப்.22-ல் புதிதாக தொடங்கும்: சித்தராமையா அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்
    • ப்ளாக்மெயில்: திரை விமர்சனம்
    • தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை 
    • நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பத்திரிகைகளின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு
    • பலகைகள் Vs புஷப்ஸ்: இது கலோரிகளை வேகமாக எரிக்கிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.