Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, January 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
    தேசியம்

    புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் நேற்று பதவியேற்றார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான பி.ஆர்.கவாய் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி பதவிக் காலம் முடிவடையும் வரை சுமார் 6 மாதங்களுக்கு இவர் தலைமை நீதிபதியாக இருப்பார்.

    மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த 1960-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி கவாய் பிறந்தார். 1985-ல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இணைந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.

    கடந்த 1992-ல் உதவி அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு ஓராண்டு பணியாற்றினார். பிறகு 2000-ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2003 நவம்பரில் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2005-ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் இரண்டாவது நபர் பி.ஆர்.கவாய் ஆவார். மேலும் நாட்டின் நீதித்துறைக்கு தலைமை வகிக்கும் முதல் பவுத்தர் இவர் ஆவார்.

    பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர்.கவாய் இடம்பெற்றுளார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளளை கவாய் தலைமையிலான அமர்வு விடுவித்தது. வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்த அமர்வில் கவாய் இடம்பெற்றிருந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தும் தேர்தல் பத்திரம் செல்லாது என்றும் தீர்ப்பளித்த அமர்வில் கவாய் அங்கம் வகித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல் முறையாக ஜப்பானில் இருந்து கொண்டு வர சிறந்த நினைவுப் பொருட்கள் என்ன? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த இடம் அனைவரையும் வரவேற்கிறது, ஆனால் பிறப்பு இல்லை, அடக்கம் இல்லை: இது எந்த இடம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆயில் vs ராட் vs ஃபிலமென்ட் vs ப்ளோவர் ஹீட்டர்கள்: எது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எம்சி மேரி கோமின் மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அவரது முன்னாள் கணவர் ஒன்லர் கோம் பதிலளித்து, “அவள் ஒரு விவகாரத்தில் இருந்தாள்…” – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • காலப்போக்கில் உங்கள் குளிர்சாதன பெட்டியை மூடிமறைக்கும் உணவு சேதப்படுத்தும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.