Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“புதிய இந்தியாவின் ‘பதிலடி’ மொழி” – தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம்
    தேசியம்

    “புதிய இந்தியாவின் ‘பதிலடி’ மொழி” – தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம்

    adminBy adminMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “புதிய இந்தியாவின் ‘பதிலடி’ மொழி” – தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டேராடூன்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி யாத்திரை (மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை) பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தராகண்டின் சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த யாத்திரை நடந்தது.

    ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யாத்திரையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வின்போது, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு சவுர்ய ஸ்தலத்தில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்பு முதல்வர் தாமி கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா முழு திறன் கொண்டுள்ளது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல் வெளிப்பட்டதோடு மட்டும் இல்லாமல், பயங்கரவாதம் மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியையும் உணர்த்தியுள்ளது.

    அதாவது, புதிய இந்தியாவானது ஒவ்வொரு பயங்கரவாத செயல்களுக்கும் அதன் சொந்த மொழியிலேயே பதிலளிக்கும் என்பதே அது. ஒவ்வொரு பயங்கரவாத செயலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டுள்ள இந்தியாவின் எல்லைகள், மேம்பட்ட அதன் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்படுகின்றன.

    உத்தராகண்ட் துணிச்சல் மிக்கவர்களின் பூமி. இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் தேச சேவையுடன் தொடர்புடையவை. நமது பாதுகாப்பு படைகளின் ஒழுக்கம், துணிச்சல், தியாகத்திலிருந்து மாநில இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். அதேபோல் ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்” என்று முதல்வர் தாமி பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அந்தமான் அருகே பாய்மர படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை மீட்டது இந்திய கடலோர காவல் படை

    July 12, 2025
    தேசியம்

    தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை

    July 12, 2025
    தேசியம்

    டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்

    July 11, 2025
    தேசியம்

    “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம்; நம்மால் முடியாது” – பஞ்சாப் முதல்வர்

    July 11, 2025
    தேசியம்

    காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே

    July 11, 2025
    தேசியம்

    ஆதார், வாக்காளர், ரேஷன் அட்டை ஆவணமாக ஏற்கப்படுமா? – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை
    • இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் எம்.டி., சிஇஓ.வாக பிரியா நாயர் நியமனம்
    • அந்தமான் அருகே பாய்மர படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை மீட்டது இந்திய கடலோர காவல் படை
    • மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
    • ‘இந்த சேறுகளை கைது செய்யுங்கள்’: பனி வாகனங்களை குறிவைத்த எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிரம்ப் கோருகிறார்; முழு சக்தியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளை வழிநடத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.