Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை
    தேசியம்

    புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார்.

    அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க முதல்​வர் ரேகா குப்​தாவை நெருங்​கிய அவர் சிறிது நேரம் பேசி​னார். பின்​னர் முதல்​வரை திட்​டிய அவர் திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உறவினர் ஒரு​வரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​திருந்​த​தாக​வும், அதற்​காக உதவி கேட்டு அவர் டெல்லி முதல்​வரை சந்​திக்க வந்​தார் என சிலர் கூறுகின்​றனர். சிசிடிவி காட்​சிகளை ஆராய்ந்​த​தில், அவர் முதல்​வர் இல்​லத்​துக்கு முதல் நாளே வந்து அங்​குள்ள பகு​தியை ஆய்வு செய்து வீடியோ எடுத்​துள்​ளார். எனவே இது திட்​ட​மிட்ட தாக்​குதல் என தெரிய​வந்​துள்​ளது. அந்த வீடியோ காட்​சிகள் போலீஸ் விசா​ரணைக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

    இந்த தாக்​குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவுக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் ஹரிஸ் குராணா கூறுகை​யில், ‘‘இந்த தாக்​குதலை நாங்​கள் கண்​டிக்​கிறோம். இந்த தாக்​குதல் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டதா என விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். டெல்லி அமைச்​சர் மன்​ஜிந்​தர் சிங் சிர்ஷா கூறுகை​யில், ‘‘முதல்​வரின் பணி​களை எதிர்க்​கட்​சி​யின​ரால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை.

    இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் யார் இருக்​கின்​றனர் என விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். இந்த தாக்​குதலுக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள டெல்லி முன்​னாள் முதல்​வரும், ஆம் ஆத்மி தலை​வரு​மான ஆதிஷி கூறுகை​யில், ‘‘ஜனநாயகத்​தில் வன்​முறைக்கு இடமில்​லை. டெல்லி முதல்​வர் ரேகா குப்​தா​வின் மீதான தாக்​குதல் மிகுந்த கண்​டனத்​துக்​குரியது. குற்​ற​வாளி​கள் மீது டெல்லி போலீ​ஸார் கடும் நடவடிக்கை எடுப்​பர் என நம்​பு​கிறேன்’’ என்​றார்.

    நாய்​களை நேசிப்​பவ​ரா? – தாக்​குதல் நடத்​திய ராஜேஷ் சக்​ரி​யா​வின் தாய் பானு கூறுகை​யில், ‘‘எனது மகன் ராஜேஷ் நாய்​களை நேசிப்​பவர். டெல்​லி​யில் தெரு​நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் அடைக்க உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் அளித்த உத்​தர​வால், ராஜேஷ் கோபம் அடைந்​தார். இதையடுத்​து​தான் அவர்​ டெல்​லி சென்​றார்​’’ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் தர்கா சேதம்: போலீஸார் தீவிர விசாரணை

    August 21, 2025
    தேசியம்

    திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம்

    August 21, 2025
    தேசியம்

    அவசரநிலை காலத்தில் நாட்டில் 1.07 கோடி பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு

    August 21, 2025
    தேசியம்

    வடகிழக்கு மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவரின் சான்றிதழ்களில் பெயர், பாலினத்தை மாற்ற நீதிமன்றம் உத்தரவு

    August 21, 2025
    தேசியம்

    பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப் பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு

    August 21, 2025
    தேசியம்

    கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதித் துறையை விமர்சித்த விவகாரம்: சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மிகச் சிறிய குழந்தைகளுக்கான கோவ் -19 தடுப்பூசியை பரிந்துரைக்கிறது, தற்போதைய யு.எஸ். சி.டி.சி பரிந்துரைகளிலிருந்து ஒரு இடைவெளி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரண்டு தலைகளுடன் டைனோசர்? அரிய புதைபடிவ கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை ஸ்டன் செய்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் தர்கா சேதம்: போலீஸார் தீவிர விசாரணை
    • அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்பு தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.