Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிஹார் ‘SIR’ நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது: மத்திய அரசு
    தேசியம்

    பிஹார் ‘SIR’ நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது: மத்திய அரசு

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிஹார் ‘SIR’ நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது: மத்திய அரசு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஹார் SIR விவகாரம் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவர்கள்தான் (ராகுல் காந்தி) அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்கிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை. இதை தேர்தல் ஆணையம் பல பத்தாண்டுகளாக செய்து வருகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். இதில் அவர்களின் சொந்த நலன் அடங்கி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோருவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு எதிராக விவாதிப்பதற்கான அழைப்பு. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான விவாதத்தை மக்களவையால் தொடங்க முடியுமா? அரசியலமைப்பின் அமைப்பு முறையை புரிந்து கொள்ளாதவர்களிடம் விவாதிப்பதில் பயன் இல்லை: என விமர்சித்தார்.

    இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது முதல்முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே, 2003ல் நடந்துள்ளது. அதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது.

    தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கிறது. வாக்காளர் திருத்தப்பட்டியல் குறித்து அச்சப்பட எதுவுமில்லை. ஏனெனில், அது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்.” என தெரிவித்தார்.

    இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்றும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மக்களவை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை எழுப்பி கூச்சலிட்டனர். கேள்வி நேரம் முடிந்த உடன் உங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என கூறி சபாநாயகர் சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர்.

    நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்நாடகாவில் எச்.ஐ.வி பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, மாமா: சொத்துக்காக கொல்லப்பட்டதாக தந்தை புகார்

    July 31, 2025
    தேசியம்

    நிதாரி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    July 31, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்

    July 31, 2025
    தேசியம்

    தீவிரவாதிகள் 3 பேரும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: அமித் ஷா தகவல்

    July 31, 2025
    தேசியம்

    ரகசிய சுரங்கங்களில் தண்ணீரைச் செலுத்தி தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு

    July 31, 2025
    தேசியம்

    இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘பான் இந்தியா’ படங்களில் வில்லன் ஆகும் ஹீரோக்கள்!
    • கொடிக்கம்பம் வழக்கில் தவெக இடையீட்டு மனு தாக்கல்
    • வாரத்திற்கு இரண்டு முறை முட்டைகளை வைத்திருப்பது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இந்த பெரிய நோயைத் தடுக்கவும் உதவும் – இந்தியாவின் நேரங்கள்
    • கர்நாடகாவில் எச்.ஐ.வி பாதித்த தம்பியை கொலை செய்த அக்கா, மாமா: சொத்துக்காக கொல்லப்பட்டதாக தந்தை புகார்
    • ஆடுகள வடிவமைப்பாளர் விவகாரத்தில் கில் கூறுவதென்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.