Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ்
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ்

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

    பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்த பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியற்ற பெயர்கள் நீக்கப்படும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பதிவு இருப்பின் அது சரி செய்யப்படும், தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதேநேரத்தில், தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “இந்திய தேர்தல் ஆணையம் பாஜக அலுவலக உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக, அது செயல்படுத்தப்படும் முறையையே எதிர்க்கிறோம். ஏனெனில், அது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

    இது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை. நாங்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஜனநாயகத்தின் பிறப்பிடம் பிஹார். அது இங்கே கொல்லப்படுவதை எங்களால் பார்க்க முடியாது. இந்த விவகாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    மேலும், நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுத உள்ளோம். வரும் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம்.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால் இந்தியாவுக்கு மாற்று வழிகள் உள்ளன: மத்திய அரசு

    July 17, 2025
    தேசியம்

    கேரளாவில் தொடரும் கனமழை: வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    July 17, 2025
    தேசியம்

    நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி

    July 17, 2025
    தேசியம்

    நிமிஷா பிரியாவை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – இந்திய வெளியுறவு அமைச்சகம் விவரிப்பு

    July 17, 2025
    தேசியம்

    இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா

    July 17, 2025
    தேசியம்

    அமெரிக்காவின் 3 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு அடுத்த வாரம் விநியோகம்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நிமிஷா பிரியா வழக்கு: சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குதல் என்று அரசாங்கம் கூறுகிறது; உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் தொடர்பில் உள்ளது | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கின்றன” – திருமாவளவன் கருத்து
    • கண் புற்றுநோய் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதுரை மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும்: செல்லூர் ராஜூ
    • சிலந்திகளை உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்க எளிதான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.