Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்
    தேசியம்

    பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்

    adminBy adminSeptember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: பிஹாரின் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார்.

    பிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட்டின் ஜோதிர் பீட சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, “நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக பல வாக்குறுதிகளை அளித்தும் எந்த கட்சியும் பசுவதைக்கு எதிராக உறுதியாக செயல்படவில்லை. பிஹார் மாநிலத் தேர்தலின்போது பசு பாதுகாப்பு மற்றும் சனாதன தர்மத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க வேண்டும்.

    வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்த உள்ளோம். அவர்களின் பெயர்களை இப்போது வெளியிட மாட்டேன். அவ்வாறு செய்தால், அவர்களின் வேட்புமனு ரத்து செய்யப்படலாம். பசு பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுயேட்சை வேட்பாளர்களை 243 தொகுதிகளிலும் நாங்கள் அடையாளம் காண்போம். அவர்களுக்கு எனது ஆசி கிடைக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் பசு பாதுகாப்புக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள்.

    பசுக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக பல கட்சிகளை நாம் ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். ஆனால், இந்த திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பசு வதையை பாவமாகக் கருதும், பரந்த உணர்வுள்ள இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே நாம வாக்களிக்க வேண்டும்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தும் நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மத்திய அரசு இவ்விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பசுவதையில் ஈடுபடும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இத்தகைய அரசியல்வாதிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    தனது கட்சி பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஒருபுறம் கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இது மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் தொந்தரவு அளிக்கக்கூடியதாகவும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

    பிஹாரில் பசு பாதுகாப்பு யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்பு, தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: டெல்லியில் திரையிடும் கிளப்களுக்கு எச்சரிக்கை

    September 13, 2025
    தேசியம்

    “நேபாளத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு சுசீலா கார்கி வழிவகுப்பார்” – மோடி நம்பிக்கை

    September 13, 2025
    தேசியம்

    சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியாது: தேர்தல் ஆணையம்

    September 13, 2025
    தேசியம்

    இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக உத்தவ் தாக்கரே போராட்டம் அறிவிப்பு

    September 13, 2025
    தேசியம்

    மணிப்பூரில் மோடி 3 மணி நேரம் மட்டுமே இருந்தது கேலிக்கூத்து: கார்கே விமர்சனம்

    September 13, 2025
    தேசியம்

    ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார்: கேடிஆர் குற்றச்சாட்டு

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாம்சங் கேலக்சி F17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • வீக்கம் மற்றும் வாயு இயல்பானதா? இயற்கையாகவே எத்தனை முறை அல்லது மாதத்திற்கு எத்தனை முறை நடக்க முடியும்? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “விஜய்க்கு கூட்டம் கூடுவது மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளை காட்டுகிறது” – கிருஷ்ணசாமி
    • இதய துடிப்பு மாற்றங்கள் மற்றும் அவை சுட்டிக்காட்டும் நோய்கள்
    • உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.