Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு
    தேசியம்

    பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தமிழகத்​தின் தென்​காசி மாவட்ட கடையநல்​லூரை சேர்ந்த சுப்​பையா – மலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் எஸ்​.​ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி.​யில் வேதி​யல் பிரி​வில் 2003-ல் பட்​டம் பெற்​றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.​யின் அலிகரில் பணியை தொடங்​கி​னார். பின்​னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரி​விலேயே பணி​யில் சேர்ந்​தார். ஐஏஎஸ் பணி​யில் அவுரய்​யா, சோன்​பத்​ரா, குஷி நகர் மற்​றும் சுல்​தான்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் ஆட்​சி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

    கடந்த நவம்​பர் 2022-ல் வாராணசி​யின் 58-வது ஆட்​சி​ய​ராக ராஜலிங்​கத்தை முதல்​வர் ஆதித்​ய​நாத் நியமித்​தார். இந்த மாவட்​டத்​தில் ஆட்​சி​ய​ராக நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்​டரை ஆண்டு வாராணசி நிர்​வாகத்​தில் 3 காசி தமிழ்ச் சங்​கமங்​கள் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. பிரதமர் உத்​தர​வின் பேரில் பல கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் ராஜலிங்​கம் அமல்​படுத்​தி​னார். இதனால், பிரதமர் மோடி​யின் அபி​மானத்தை பெற்​றார். பின்​னர் பிரதமர் மோடி நேரடி​யாக​வும் வீடியோ கான்​பரன்​சிங் கூட்​டங்​களி​லும், ‘மிஸ்​டர் ராஜலிங்​கம்’ என்று பெயரைக் குறிப்​பிட்டு அழைக்​கும் அளவுக்கு நம்​பிக்​கைக்கு உரிய​வ​ராக செயல்​பட்​டார்.

    இந்​நிலை​யில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. எனினும், மகா கும்​பமேளா, பல கோடி பக்​தர்​கள் வரு​கை, காசி தமிழ்ச் சங்​கமம் 3.0 நிகழ்ச்சி உள்​ளிட்ட முக்​கிய பணி​கள் இருந்​த​தால் ராஜலிங்​கத்​துக்கு பதவி உயர்​வுக்​கான பணி ஒதுக்​கப்​பட​வில்​லை.

    இந்​நிலை​யில், அந்​தப் பணி​களை அவர் சிறப்​பாக செய்து முடித்​த​தால், தற்​போது அவர் வாராணசி​யிலேயே மண்டல ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். வாராணசி மண்​டலத்​தின் 4 மாவட்ட ஆட்​சி​யர்​களின் பணி​களை மேற்​பார்​வை​யிடும் இந்த ஆணை​யர் பணி​யில் நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவர்​தான்.

    இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராஜலிங்​கம் கூறும்​போது, ‘‘பு​திய பணி​யில், முக்​கிய​மாக வாராணசி​யில் அமலாக்​கிய ரூ.49,000 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை கண்​காணிக்​கும் பணி​யும் அடங்​கி​யுள்​ளது. அத்​துடன் வாராணசி வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் என்ற கூடு​தல் பணி​யும் உள்​ளது. இந்த பதவி​யில், மண்​டலத்​தின் நகரங்​களை விரிவடைய செய்​வது, வாராணசி போக்​கு​வரத்தை அடுத்​தக்​கட்​டத்​துக்கு கொண்டு செல்​வது, நகரின் திடக்​கழிவு மேலாண்மை உள்​ளிட்ட பல பணி​களை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளேன். காசி விஸ்​வ​நாதர் கோயில் அறக்​கட்​டளை தலை​வ​ராக பக்​தர்​களுக்​கான வசதி​களை மேம்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளேன். அதன் ஆலோ​சனை​களை​யும் வரவேற்​கிறேன்’’ என்​றார். ராஜலிங்​கத்​துக்கு மனை​வி நித்​யா மற்​றும்​ மகன்​ வேலன்​ ஆகியோர்​ உள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு ஆலோசனை

    July 20, 2025
    தேசியம்

    இமாச்சலில் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 116 பேர் உயிரிழப்பு: ரூ.1,230 கோடிக்கு சேதம்

    July 20, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த வேற்று மதத்தைச் சேர்ந்த மேலும் 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

    July 20, 2025
    தேசியம்

    சத்தீஸ்கர் என்கவுன்ட்டர்: மாவோயிஸ்ட்கள் 6 பேர் உயிரிழப்பு

    July 20, 2025
    தேசியம்

    2036-ல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 நிதியுதவி: அமித் ஷா தகவல்

    July 20, 2025
    தேசியம்

    மோடியை முன்னிறுத்தாவிட்டால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது: நிஷிகாந்த் துபே கருத்து

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியாவின் முதல் பார்முலா 1 கார் பந்தய வீரர்: சினிமாவாகிறது நரேன் கார்த்திகேயன் பயோபிக்
    • பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்
    • உங்கள் இடத்திற்கு வாசனை, நிறம் மற்றும் தோட்ட முறையீடு சேர்க்க 8 அழகான லாவெண்டர் தாவரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் அரசு ஆலோசனை
    • ‘பேட் கேர்ள்’ டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.