Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு: இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
    தேசியம்

    பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு: இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு: இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

    சிங்​கப்​பூர் அதிபர் லாரன்ஸ் வாங் 3 நாட்​கள் பயண​மாக டெல்லி வந்​துள்​ளார். அவருடன் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விவியன் பால​கிருஷ்ணன், நிதித் துறை அமைச்​சர் ஜெப்​ரி, வர்த்தக துறை அமைச்​சர் கான் சியோ ஹுவாங் ஆகியோ​ரும் இந்​தியா வந்​துள்​ளனர்.

    மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை சிங்​கப்​பூர் பிரதமர் வாங் சந்​தித்​து பேசி​னார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் நேற்று அவர் சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக சுற்​றுச்​சூழலுக்கு மாசு இல்​லாத கப்​பல் போக்​கு​வரத்​து, விமான போக்​கு​வரத்து பயிற்​சி, செமி கண்​டக்​டர் உள்​ளிட்ட துறை​களில் திறன்​சார் பயிற்​சி, செயற்​கைக்​கோள் தகவல் பரி​மாற்​றம், வங்​கி, முதலீடு சார்ந்த தகவல் பரி​மாற்​றம் ஆகியவை தொடர்​பாக ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன. இதன்​பிறகு இரு தலை​வர்​களும் கூட்டாக நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தனர். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது:

    தென்​கிழக்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்தக கூட்​டாளி​யாக சிங்​கப்​பூர் விளங்​கு​கிறது. பாது​காப்பு துறை​யில் இரு நாடு​கள் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது. பசுமை கப்​பல் போக்​கு​வரத்​து, திறன் மேம்​பாடு, சிவில் அணு சக்​தி, நகர்ப்​புற நீர் மேலாண்​மை, செமி கண்​டக்​டர் உற்​பத்​தி, தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்​பு, செயற்கை நுண்​ணறி​வு, குவாண்​டம், டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், விண்​வெளி ஆகிய துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும்.

    இந்​தி​யா​வின் யுபிஐ, சிங்​கப்​பூரின் பே நவ் டிஜிட்​டல் பரிவர்த்​தனை கட்​டமைப்​பு​கள் வெற்​றிகர​மாக இணைக்​கப்​பட்டு உள்​ளன. இந்​திய துறை​முகங்​களின் கட்​டமைப்​பு​களை விரிவுபடுத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். இந்​த துறை​யில் சிங்​கப்​பூரின் நிபுணத்​து​வம் இந்​தி​யா​வுக்கு பயனுள்​ள​தாக இருக்​கும். சிங்​கப்​பூரின் பிஎஸ்ஏ இன்​டர்​நேஷனல் நிறு​வனம் மும்பை துறை​முகத்​தில் உரு​வாக்​கிய புதிய முனை​யம் இன்று தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மும்பை துறை​முகத்​தின் சரக்​கு​களை கையாளும் திறன் மேலும் அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

    இந்​திய, பசிபிக் பிராந்​தி​யத்​தில் அமை​தி, ஸ்திரத்​தன்​மையை நிலை​நாட்​டு​வ​தில் இந்​தி​யா​வும் சிங்​கப்​பூரும் இணைந்து செயல்​படும். சிங்​கப்​பூர் மற்​றும் ஆசி​யான் கூட்​டமைப்​புடன் ஒத்​துழைப்பு மேம்​படுத்​தப்​படும். சர்​வ​தேச தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். பஹல்​காம் தாக்​குதலை கண்​டித்த சிங்​கப்​பூர் அரசுக்கு மனதார நன்றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

    சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறும்​போது, “இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. உலகின் பல்​வேறு பகு​தி​களில் நிலை​யற்​றதன்மை காணப்​படு​கிறது. இந்த காலத்​தில் இந்​தி​யா, சிங்​கப்​பூர் உறவு மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்று இருக்​கிறது. விமான போக்​கு​வரத்​து, செமி கண்​டக்​டர் துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். குஜ​ராத்​தின் கிப்ட் சிட்டி இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே பால​மாக செயல்​படு​கிறது” என்று தெரி​வித்​தார்.

    சென்னையில் பயிற்சி மையம்: கடந்த பிப்​ர​வரி​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட மத்​திய பட்​ஜெட்​டில் சென்​னை, ஹைத​ரா​பாத், புவனேஸ்​வர், கான்​பூர், லூதி​யானா நகரங்​களில் தேசிய திறன் பயிற்சி மையங்​கள் அமைக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​படும். இந்த திட்​டம் ரூ.60,000 கோடி மதிப்​பில் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதன்​படி மத்​திய அரசு சார்​பில் ரூ.30,000 கோடி, மாநில அரசுகள் சார்​பில் ரூ.20,000 கோடி, தொழில் நிறு​வனங்​கள் சார்​பில் ரூ.10,000 கோடி முதலீடு செய்​யப்பட உள்​ளது.

    இதில் சென்​னை​யில் அமைய உள்ள திறன் பயிற்சி மையத்தை நிறுவ சிங்​கப்​பூர் அரசு ஒத்​துழைப்பு அளிக்​கும் என்று பிரதமர் மோடி நேற்று அறி​வித்​தார். இது தொடர்​பாக சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறும்​போது, “இந்​தி​யா​வின் திறன் மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு சிங்​கப்​பூர் தொடர்ந்து ஆதரவு அளிக்​கும். சென்​னை​யில் திறன் பயிற்சி மையம் அமைக்க சிங்​கப்​பூர் அரசு உதவி செய்​யும். இந்த திட்​டத்​தில் பங்​கேற்க வாய்ப்​பு அளித்​த பிரதமர்​ மோடிக்​கு நன்​றியை தெரி​வித்​துக் ​கொள்​கிறேன்​” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மைதேயி, குகி குழுக்கள், மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது

    September 5, 2025
    தேசியம்

    என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ வீடியோ வெளியீடு

    September 5, 2025
    தேசியம்

    இமாச்சல், உத்தராகண்ட் பேரிடருக்கு காடுகள் அழிப்பு காரணமா? – அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 5, 2025
    தேசியம்

    மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிட குக்கி-ஸோ கவுன்சில் ஒப்புதல்: மத்திய அரசு தகவல்

    September 4, 2025
    தேசியம்

    இந்தூர் மருத்துவமனையில் எலிகள் குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

    September 4, 2025
    தேசியம்

    காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவின் மனைவியிடமும் 2 வாக்காளர் அட்டை

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்டா உட்பட 6 மாவட்டங்களில் செப்.8-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
    • எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஜிஎஸ்டி குறைப்புக்கு ஒப்புதல்: நிர்மலா சீதாராமன் தகவல்
    • குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உதவும் நடைபயிற்சி நுட்பங்கள் – இந்தியாவின் டைம்ஸ்
    • மைதேயி, குகி குழுக்கள், மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது
    • யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.