Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர் குறித்த விமர்சனத்துக்காக FIR பதிவு பற்றி பயப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்
    தேசியம்

    பிரதமர் குறித்த விமர்சனத்துக்காக FIR பதிவு பற்றி பயப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்

    adminBy adminAugust 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர் குறித்த விமர்சனத்துக்காக FIR பதிவு பற்றி பயப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி குறித்த எனது பதிவுக்காக மகாராஷ்டிர போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பற்றி பயப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை ) பிஹார் மாநிலம் கயாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ.12,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தார்.

    அப்போது பேசிய அவர், “பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். இந்த பிராந்தியம் சிகப்பு தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி இருந்தது. கயா போன்ற நகரங்கள் இருளில் தள்ளப்பட்டன ஒட்டுமொத்த மாநிலத்தையும் அவர்கள் இருளில் தள்ளினர். கல்வி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை எனும் நிலையில், பல தலைமுறையினர் வேறு வழியின்றி மாநிலத்தைவிட்டு வெளியேறினர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிஹார் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தது. அவர்களின் வாழ்க்கைக்கோ, அவர்கள் சந்தித்த துயரங்களுக்கோ அது எதையும் செய்யவில்லை.” என விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபகரமான பதிவு ஒன்றினை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது அந்த பதிவு குறித்து மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மிலிந்த் நரோட், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதையடுத்து, தேஜஸ்வி யாதவ்க்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 196 (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 356 (அவதூறு), 352 (அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் அவமதித்தல்) மற்றும் 353 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்த கேள்விக்கு இன்று (சனிக்கிழமை) பதில் அளித்த தேஜஸ்வி யாதவ், “முதல் தகவல் அறிக்கை பற்றி யாருக்கு பயம்? வெற்றுப் பேச்சு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஒரு குற்றமா? அவர்களள் உண்மையைக் கண்டு அஞ்சுகிறார்கள். முதல் தகவல் அறிக்கைக்காக நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் உண்மையை தொடர்ந்து பேசுவோம்.” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது

    September 16, 2025
    தேசியம்

    பிரபல இந்தூர் ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை: உள்ளூர் பாஜக தலைவர் உத்தரவால் சர்ச்சை

    September 16, 2025
    தேசியம்

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல் ‘ஆந்த்ராத்’ கடற்படையிடம் ஒப்படைப்பு

    September 16, 2025
    தேசியம்

    பிஹாரை அடுத்து டெல்லியிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்!

    September 16, 2025
    தேசியம்

    மைசூரு தசரா விழாவை பானு முஸ்தாக் தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

    September 16, 2025
    தேசியம்

    பசு அரசியல்: பிஹார் தேர்தலில் போட்டியிடும் சங்கராச்சாரியார் கட்சி!

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.1 கோடி ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல்: அசாமில் பெண் அதிகாரி கைது
    • வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை: இந்திய கம்யூ. வரவேற்பு
    • ஆப்பிள் வாட்ச் இப்போது உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிய முடியும்: உயர் இரத்த அழுத்த அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன, செயல்படுத்துவதற்கான படிகள் மற்றும் மிக முக்கியமான தகவல்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரபல இந்தூர் ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை: உள்ளூர் பாஜக தலைவர் உத்தரவால் சர்ச்சை
    • மல்லை சத்யா தலை​மை​யில் புதிய அமைப்பு: பெயர், கொள்​கைகளை முடிவு செய்ய 15 பேர் குழு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.