Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்
    தேசியம்

    “பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

    கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

    இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

    கடந்த 2020-ல் நிலவிய அரசியல் சூழல் வேண்டுமென காங்கிரஸ் கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி விரும்புவதாக நான் கருதுகிறேன். என்னை என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிப்பதன் மூலம் தங்கள் பாதையை சுலபமாக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. எல்லோருக்கும் நான் மீண்டும் சொல்லிக் கொள்வது ஒன்று மட்டும்தான். அது பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நான் நினைத்து கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

    லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): எல்ஜேபி(ஆர்வி) கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிராக் பாஸ்வான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இக்கட்சிக்கு பட்டியல் சமூக வாக்குகள் பெருமளவில் உள்ளது. எனவே கடந்த கால தேர்தல்களில் இக்கட்சி பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

    2020 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட எல்ஜேபி, ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற போதிலும், பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது.

    2020 தேர்தலில் எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டு ஒன்பது இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், 93 இடங்களில் மூன்றாவது இடத்தையும், 32 இடங்களில் நான்காவது இடத்தையும் பிடித்தது. அக்கட்சி 13 இடங்களில் 20% முதல் 30% வாக்குகளைப் பெற்றது, 43 இடங்களில் 10% முதல் 20% வாக்குகள் மற்றும் 77 இடங்களில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது.

    அப்போது எல்ஜேபி என்டிஏ கூட்டணியில் இருந்திருந்தால் கூடுதலாக 27 இடங்களை வென்றிருக்கலாம். அதேபோல எல்ஜேபியால் ஆர்ஜேடி, காங்கிரஸின் மகாகத்பந்தன் 31 இடங்களில் தோற்றது. அந்த 31 இடங்களில் வென்றிருந்தால் மகாகத்பந்தன் 122 இடங்களை வென்று ஆட்சியமைத்திருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் என்டிஏ அணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட எல்ஜேபி(ஆர்வி) அனைத்து இடங்களையும் வென்றது. எனவே இக்கட்சி 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் சிபிஆர்

    September 12, 2025
    தேசியம்

    சிக்கிமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

    September 12, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

    September 12, 2025
    தேசியம்

    திருச்சி உட்பட மேலும் 5 விமான நிலையங்களில் விரைவாக குடியேற்ற ஒப்புதல் வழங்க வசதி: அமித் ஷா தொடங்கி வைத்தார்

    September 12, 2025
    தேசியம்

    நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

    September 12, 2025
    தேசியம்

    இந்தியா – மொரீஷியஸ் இடையே 10 ஒப்பந்தம்: பிரதமர்கள் மோடி, நவீன் முன்னிலையில் கையெழுத்து

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் சிபிஆர்
    • நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு
    • அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
    • கூந்தலுக்கான ஆமணக்கு எண்ணெய்: முடி வீழ்ச்சியை உடனடியாக நிறுத்த ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி
    • சிக்கிமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.