Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் பிரஜ்வலுக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 5 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. பிரஜ்வல் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்த்தது. ‘‘இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்கப்​பட்​டுள்​ளன. அதற்​கான சாட்​சி​யங்​களும், ஆவணங்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் அடிப்​படை​யில் பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.” என நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட் தெரிவித்தார்.

    இதையடுத்து, ஆகஸ்ட் 2-ம் தேதி தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்​ரஹாரா சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

    இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “பாதிக்கப்பட்டவரின் புகாருக்கும் சாட்சியத்துக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரை புகார் அளிக்குமாறு காவல்துறையினர் கட்டாயப்படுத்தி உள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு படுக்கையில் காணப்பட்டதாகக் கூறப்படும் கறை ஆதாரங்கள் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஐரோப்பிய நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.1 முதல் அமல்: பியூஷ் கோயல்

    September 29, 2025
    தேசியம்

    இந்தியா – பூடான் இடையே ரூ.4,033 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

    September 29, 2025
    தேசியம்

    சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

    September 29, 2025
    தேசியம்

    சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

    September 29, 2025
    தேசியம்

    கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘எக்ஸ்’ தளம் முறையீடு செய்ய முடிவு – பின்னணி என்ன?

    September 29, 2025
    தேசியம்

    பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தவெகவில் தொண்டர் படை உருவாக்க வேண்டும்” – துரை வைகோ யோசனை
    • ஒரு ஆப்பிள் இன்னும் சாப்பிட இன்னும் நல்லது, எப்போது தூக்கி எறிய வேண்டும் என்பதை எப்படி அறிவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருப்பது எளிய காரியம் அல்ல” – பாக். கிரிக்கெட் ரசிகர்கள் விரக்தி
    • ஓய்வுக்கால பலன்களை வழங்கக் கோரிக்கை: போக்குவரத்து ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
    • காலையில் உங்கள் கண்கள் ஏன் மிருதுவானவை: காரணங்கள், சிகிச்சை மற்றும் எப்போது கவலைப்பட வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.