Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி சித்ரவதை
    தேசியம்

    பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி சித்ரவதை

    adminBy adminMay 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி சித்ரவதை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    கடந்த மாதம் 23-ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    இந்தியா தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் கடந்த வாரம் விடுவித்தது. பூர்ணம் குமார் தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    இதுகுறித்து பூர்ணம் குமாரின் மனைவி ரஜனி கூறியதாவது: பாகிஸ்தானின் பிடியிலிருந்த 21 நாட்களும் என் கணவரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளனர். அவரைத் தூங்க விடாமல் செய்துள்ளனர். பஞ்சாபின் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் பிஎஸ்எஃப் உயர் அதிகாரிகள், வீரர்கள், யார் யார் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்பது குறித்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.

    17 வருடங்களாக எனது கணவர் பிஎஸ்எஃப் துணை ராணுவப் பிரிவில் இருக்கிறார். இனியும் அவர் தனது பணியைத் தொடர்வார். விரைவில் அவர் பணிக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    அவருக்கு உடல்ரீதியான துன்புறுத்தல்களை பாகிஸ்தான் ராணுவம் தரவில்லை. ஆனால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். தங்கியிருந்த 21 நாட்களும் அவரிடம் இரவு முழுவதும் விசாரித்துள்ளனர். அவரை துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக உளவாளி என்ற சந்தேகத்திலேயே விசாரித்துள்ளனர்.

    3 முறை அவரை வெவ்வெறு இடங்களுக்கு மாற்றி விசாரித்துள்ளனர். ஆனால், வேளா வேளைக்கு உணவு கொடுத்துள்ளனர். ஆனால், அவர் பல் தேய்க்க அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியபோது அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். இவ்வாறு ரஜனி தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை

    July 12, 2025
    தேசியம்

    டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்

    July 11, 2025
    தேசியம்

    “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம்; நம்மால் முடியாது” – பஞ்சாப் முதல்வர்

    July 11, 2025
    தேசியம்

    காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே

    July 11, 2025
    தேசியம்

    ஆதார், வாக்காளர், ரேஷன் அட்டை ஆவணமாக ஏற்கப்படுமா? – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

    July 11, 2025
    தேசியம்

    மணிப்பூர் செல்வாரா பிரதமர்? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரண்டு நாட்கள் பயணமாக ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
    • நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளா – தமிழகம் இடையிலான 20 சாலைகளிலும் கண்காணிப்பு
    • அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்
    • உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு
    • பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.