Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா
    தேசியம்

    பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா

    adminBy adminJune 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, ​​“இல்லை, அது ஒருபோதும் அமல்படுத்தப்படாது. ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை, ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வோம். நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பெற்று வந்த பாகிஸ்தான் தண்ணீரின்றி தவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

    சிந்து நதி நீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவை, பாகிஸ்தான் பல முறை வலியுறுத்தியது. பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு இது தொடர்பாக 4 கடிதங்களை எழுதியுள்ளார். ஒப்பந்தத்தை இந்தியா மீறுகிறது என்றும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய அனுமதி இல்லை என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

    எனினும், “பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது எல்லைக்குள் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும் இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

    June 30, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
    • அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள்
    • ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!
    • காவல் நிலைய மரணங்களுக்கு போலி கண்ணீர் தாண்டி முதல்வரின் பதில் என்ன? – டிடிவி தினகரன்
    • சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.