Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள் மீது இந்தியா குண்டு வீச்சு
    தேசியம்

    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள் மீது இந்தியா குண்டு வீச்சு

    adminBy adminMay 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகள் மீது இந்தியா குண்டு வீச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரித் மற்றும் சக்லாலா விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் நேற்று காலை குண்டு வீசன.

    இது குறித்து விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை குண்டு வீசின. பஸ்ரூர் என்ற இடத்தில் உள்ள ரேடார் மையம், சியால்கோட்டில்உள்ள விமான தளத்திலும் குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகளை, இந்தியா மிகவும் கவனமாக தேர்வு செய்து தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் விமான தாக்குதலை முறியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ராவல்பிண்டியில் சக்லாலா என்ற இடத்தில் உள்ள ‘தி நுர் கான்’ விமானப்படை தளம், பாகிஸ்தான் விமானப்படையின் கட்டுப்பாட்டு தலைமையகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்திய பகுதியில் டரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ‘தி நுர் கான்’ விமானப்படை தளம் முக்கிய பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் சாப் 2000 என்ற ரேடார் விமானம் உள்ளது. இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தியதில் இந்த விமானப்படை தளம் முக்கிய பங்காற்றியது. அதனால் இங்கு குண்டு வீசப்பட்டது.

    பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ரஃபிக்கி விமானப்படை தளத்தில் மிராஜ் மற்றும் ஜேஎப்-17 ரக போர் விமானங்கைள பாகிஸ்தான் வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த விமானப்படை தளம் முக்கிய பங்காற்றியது. அதனால் இங்கும் தாக்குதல் நடத்தப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள முரித் விமானப்படை தளம் பாகிஸ்தான் ட்ரோன்களின் தலைமையகமாக உள்ளது. இங்க பாகிஸ்தான் தயாரிப்பு ஹபார் -1, துருக்கி தயாரிப்பு பேராக்தர் டிபி2 மற்றும் அகின்சி ட்ரோன்கள் உள்ளன. கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் இங்கிருந்துதான் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பியது. இவற்றில் பலவற்றில் ஆயுதங்கள் இல்லை. பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தாக்குதலுக்கு மட்டுமே பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு வியோமிகா சிங் கூறினார்.

    ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்: இந்திய விமானப்படை நேற்று காலை நடத்திய தாக்குதல் குறித்து பாக். ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்திரி கூறுகையில், ‘‘ராவல்பிண்டி சக்லாலாவில் உள்ள நுர் கான், முரித் மற்றும் ரஃபிக்கி விமானப்படை தளங்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. ஆனால், பாக். விமானப்படை விமானங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளன’’ என்றார். லாகூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ரஹ்மான் யான் கான் என்ற இடத்தில் உள்ள ஷேக்ஜயீத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இந்தியாதாக்குதல் நடத்தியதாக பாக். அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், ஃபதேச-1 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் பி.டிவி செய்தி வெளியிட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

    July 10, 2025
    தேசியம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

    July 10, 2025
    தேசியம்

    பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட செல்போனில் 2 மடங்கு நேரம் செலவிடும் இந்திய குழந்தைகள்!

    July 10, 2025
    தேசியம்

    தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    July 10, 2025
    தேசியம்

    கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

    July 9, 2025
    தேசியம்

    வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி @ Club WC
    • “காவல் மரணங்களை மூடி மறைக்க பேரம் பேசும் திமுகவினர்” – திருப்புவனத்தில் சீமான் காட்டம்
    • வெப்பநிலை இன்று 7 டிகிரி உயர வாய்ப்பு!
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பிறகே துணை மருத்துவத்துக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
    • வாகனம், கணினி வாங்குவதற்கு ஆசிரியர்களுக்கு கடனுதவி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.