Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“பாகிஸ்தான் உடன் போரை தொடங்குவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை, மாறாக…” – சசி தரூர் கருத்து
    தேசியம்

    “பாகிஸ்தான் உடன் போரை தொடங்குவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை, மாறாக…” – சசி தரூர் கருத்து

    adminBy adminMay 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பாகிஸ்தான் உடன் போரை தொடங்குவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை, மாறாக…” – சசி தரூர் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, அதை செய்தோம். பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக இரவில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. நாம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பதிலடியை மட்டுமே கொடுத்தோம். இப்போது, ஜம்மு காஷ்மீரின் ​​பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 59 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு நமது படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால், அதை அதிகரிக்க நாம் விரும்பவில்லை.

    பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசு அல்லது ராணுவம் இருப்பது நமக்கு தெரிந்திருந்தாலும், நாம் அவற்றைத் தாக்கவில்லை. இது நமக்கு போரில் ஆர்வம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் பாகிஸ்தான், நமது ராணுவம் அல்லது அரசாங்க கட்டமைப்புகள் அல்லது பொதுமக்களின் இருப்பிடங்களைத் தாக்கினால், நம்மிடம் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லாததால், நாம் நிச்சயமாக வலுவான பதிலடியை கொடுப்போம். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் அதைத் தொடங்க மாட்டோம். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், நாடு அதன் ஆயுதப் படைகளுடன் ஒன்றாக நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

    இந்து – முஸ்லிம் பகைமை என்ற வகுப்புவாத சதியை பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் முன்வைத்தார். அதை அகற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நேற்று (மே 7) நடைபெற்ற அரசு தரப்பு செய்தியாளர் சந்திப்பில் ஒரு காஷ்மீர் பண்டிட் (வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி) ஒரு முஸ்லிம் அதிகாரியுடன் (கர்னல் சோபியா குரேஷி) ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கினார். இதுவரை நாம் அனைத்தையும் சரியாகவே செய்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூரின் தன்மை சரியாக இருந்தது” என்று சசி தரூர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    July 1, 2025
    தேசியம்

    உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

    July 1, 2025
    தேசியம்

    ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

    July 1, 2025
    தேசியம்

    கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

    July 1, 2025
    தேசியம்

    24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
    • ஆல் டே ப்ராஜெக்ட்ஸ் டார்சான் அறிமுகத்திலிருந்து கே-பாப் ஸ்டான்களிலிருந்து பின்னடைவை எதிர்கொள்கிறது: காட்சிகள் முதல் அதிர்வு வரை, ரசிகர்கள் அதை வாங்கவில்லை
    • சிங்கப்பூர் நைட்ஸ்பாட் மரணம்: அபாயகரமான கும்பல் தாக்குதலுக்காக இந்திய மூல மனிதர்; 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு
    • Prepieabeades அறிகுறிகள்: 5 அறிகுறிகள் முன்னுரிமைகள் (இரத்த பரிசோதனை இல்லாமல்) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.