Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு
    தேசியம்

    “பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நற்சான்றிதழ் வழங்குகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று ஏன் கருத வேண்டும்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.” என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாகிஸ்தானை காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இப்படிச் சொல்வதன் அர்த்தம், பாகிஸ்தான் குற்றமற்ற நாடு என்பதாகும். அவர் யாரைக் காப்பாற்ற விரும்புகிறார்? பாகிஸ்தானைப் பாதுகாப்பதால் அவருக்கு என்ன லாபம்?

    பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் நேற்று நடந்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவர்களில் இருவரது வாக்காளர் அடையாள அட்டை எண்கள் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை.

    அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை எனில், பாகிஸ்தான் ஏன் தாக்கப்பட்டது என்ற கேள்வியையும் ப. சிதம்பரம் எழுப்பியுள்ளார். பாகிஸ்தானைக் காப்பாற்ற அவர்கள் (காங்கிரஸ்) செய்யும் சதித்திட்டத்தை 130 கோடி இந்தியர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஏப்ரல் 24ம் தேதி பஹல்காமுக்குச் செல்லாமல் பிரதமர் மோடி ஏன் பிஹாருக்குச் சென்றார் என மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார். பஹல்காம் தாக்குதல் நடந்தபோது பிரதமர் வெளிநாட்டில் இருந்தார். பிரதமர் மோடி பிஹார் சென்றபோது, பஹல்காமில் ராகுல் காந்தி மட்டுமே இருந்தார். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. நாட்டின் குடிமக்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடந்தால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டியது பிரதமரின் கடமை.

    ஏப்ரல் 30-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டு அதிகாலை 1.04 மணி முதல் 1.24 மணிக்குள் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்னின் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், பாகிஸ்தானிய பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை.

    இந்த தாக்குதலை அடுத்து நமது டிஜிஎம்ஓ, இந்தியா தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி பயங்கரவாத உள்கட்டமைப்பை தாக்கியதாக பாகிஸ்தான் டிஜிஎம்ஓவிடம் தெரிவித்தார். இது மன்மோகன் சிங் ஆட்சி அல்ல, அமைதியாக இருப்பதற்கு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ரத்தம் சிந்தவைத்த பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றோம்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு ஜவஹர்லால் நேரு மட்டுமே காரணம். 1960ல் சிந்து நதி நீரில் 80% பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. 1971ல் சிம்லா ஒப்பந்தத்தின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் மறந்துவிட்டது. அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷர்மீர் பகுதியை கைப்பற்றி இருந்தால், இப்போது அங்குள்ள முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு: ஆக.19 முதல் விசாரணை தொடக்கம்

    July 30, 2025
    தேசியம்

    உலகின் எந்த தலைவரும் போரை நிறுத்தவில்லை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி உறுதி

    July 30, 2025
    தேசியம்

    “ஆபரேஷன் சிந்தூரின்போது படைகளின் கைகளை அரசே கட்டிப்போட்டது” – மக்களவையில் ராகுல் காந்தி சாடல்

    July 29, 2025
    தேசியம்

    “அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்தோம்!” – மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை

    July 29, 2025
    தேசியம்

    பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய வரைபடத்துக்குள் வர வேண்டுமென நாடு விரும்புகிறது: காங்கிரஸ்

    July 29, 2025
    தேசியம்

    பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதனை!

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் அனிமேஷன், டிசைன் பாடங்களில் பட்டப்படிப்பு அறிமுகம்
    • பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை
    • குடியரசு தலைவருக்கு கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு: ஆக.19 முதல் விசாரணை தொடக்கம்
    • சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்: பொதுப் பிரிவுக்கு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.