Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டு: பஞ்சாப் யூடியூபர் கைது!
    தேசியம்

    பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டு: பஞ்சாப் யூடியூபர் கைது!

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டு: பஞ்சாப் யூடியூபர் கைது!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சண்டீகர்: பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப் மாநிலத்தில் ஜஸ்பிர் சிங் என்ற யூடியூர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவர், 1.1 மில்லியன் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை, நடத்தி வந்தார்.

    ரூப்நகர் மாவட்டத்தில் மஹ்லான் கிராமத்தில் வசித்து வரும் ஜஸ்பிர் சிங், மொஹாலியை அடிப்படையாகக் கொண்ட மாநில சிறப்பு நடவடிக்கை பிரிவினரால் (State Special Operations Cell) கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ராவுக்கு பிறகு சமீப வாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சமூக ஊடக படைப்பாளி ஜஸ்பிர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜோதியுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.

    பஞ்சாப் போலீஸாரின் கூற்றுப்படி, ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரியான ஷாகிஸ் என்கிற ஜுத் ரன்தாவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மேலும் ஜஸ்பிர், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனின் முன்னாள் அதிகாரியான ஈஷான் உர் ரஹிம் என்கிற டேனிஷ் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஈஷான் உளவு பார்த்த குற்றச்சாட்டில் நாடுகடத்தப்பட்டார்.

    டேனிஷின் அழைப்பின் பேரில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் ஜஸ்பிர் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் உரையாடியுள்ளார். மேலும் ஜஸ்பிர், 2020, 2021 மற்றும் 2024 என மூன்று முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார்.

    ஜஸ்பிர் சிங்-ன் மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது பல்வேறு பாகிஸ்தானை சேர்ந்த தொடர்பு எண்கள் அழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ராவின் கைதுக்கு பின்பு, ஐஎஸ்ஐ- உடன் தொடர்புடை பதிவுகளை ஜஸ்பிர் அழிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் போலீஸார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “ஜான் மஹால் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஜஸ்பிர் சிங் என்பவர், பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பகுதியான பாகிஸ்தான் உளவு அமைப்பு அதிகாரியான ஷாகிர் என்கிற ஜாட் ரந்தாவா என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர் ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானியரான, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய முன்னால் அதிகாரி ஈஷன் உர் ரஹீம் என்பருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டில் இதுவரை 7 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்

    August 4, 2025
    தேசியம்

    ஆந்திராவில் உள்ள கிரானைட் குவாரியில் பரிதாபம்: பாறைகள் விழுந்து 6 ஒடிசா தொழிலாளர்கள் உயிரிழப்பு

    August 4, 2025
    தேசியம்

    சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

    August 4, 2025
    தேசியம்

    ஆக. 7ல் ராகுல் காந்தி இல்லத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்!

    August 3, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங். ஆக. 5 அன்று அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்

    August 3, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் ஒத்திவைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்வு!

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 6 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கப் பயிற்சி: மாணவர்களுக்கு வாரம்தோறும் தேர்வு நடத்த உத்தரவு
    • அண்ணா பல்கலை.யில் பொறியியல் வகுப்புகள்: ஆக. 11-ல் தொடக்கம்
    • தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
    • மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்: 500 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம்
    • டிஎன்பிஎஸ்சி மூலம் 1,850 உதவியாளர் தேர்வுக்கு மின் வாரியம் ஒப்புதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.