Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள்
    தேசியம்

    பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள்

    adminBy adminAugust 27, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே கிரி என்ற மலைக்​கி​ராமத்​தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்​தார். உத்தர பிரதேச முன்​னாள் முதல்​வர் ஹேம்​வதி நந்​தன் பகு​குணா​வின் நெருங்​கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார்.

    கேரள காவல் துறை​யில் பணி​யாற்​றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்​டில் தலச்​சேரி​யில் நடை​பெற்ற கலவரத்தை கட்​டுப்​படுத்தி நாடு முழு​வதும் பிரபலம் அடைந்​தார். கடந்த 1972-ம் ஆண்​டில் இந்​திய உளவுத் துறை​யில் அஜித் தோவல் இணைந்​தார்.

    மிசோரமில் செயல்​பட்ட தீவிர​வாத குழுக்​கள் குறித்த தகவல்​களை திரட்ட அவர் அனுப்​பப்​பட்​டார். அவரது தீவிர முயற்​சி​யால் கடந்த 1986-ம் ஆண்​டில் மத்​திய அரசுக்​கும் தீவிர​வாத குழுக்​களுக்​கும் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

    இதைத் தொடர்ந்து பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டங்​கள் குறித்த தகவல்​களை திரட்ட அந்த நாட்​டுக்கு அஜித் தோவல் அனுப்​பப்பட்​டார். இதற்​காக இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தில் அவர் பணி​யமர்த்​தப்​பட்​டார். அப்​போது பாகிஸ்​தானின் இளம் அரசி​யல் தலை​வர் நவாஸ் ஷெரீபின் மிக நெருங்​கிய நண்​ப​ராக தோவல் மாறி​னார்.

    பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத் அருகே கஹுதா என்ற பகுதி உள்​ளது. அங்கு கான் ஆராய்ச்சி மையம் செயல்​படு​கிறது. அந்த மையத்​தில் பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டப் பணி​கள் நடை​பெறு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகின. கஹுதா பகு​திக்கு அஜித் தோவல் சென்​றார்.

    பிச்​சைக்​கார​ராக வேட​மிட்டு கான் ஆராய்ச்சி மையத்தை வேவு பார்த்​தார். அங்​குள்ள சலூன் கடை​யில் ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானிகள் முடி​திருத்​தம் செய்​தனர். அந்த சலூன் கடைக்கு சென்ற அஜித் தோவல், முடிகளை சேகரித்து இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைத்​தார்.

    அந்த முடிகளை ஆய்வு செய்​த​போது யுரேனி​யம் உள்​ளிட்ட கதிர்​வீச்சு இருந்​தது தெரிய​வந்​தது. இதன்​மூலம் பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டம் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, உலக நாடு​களுக்கு ஆதா​ரத்​துடன் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. சர்​வ​தேச நாடு​களின் அழுத்​தம் காரண​மாக பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டங்​கள் சுமார் 15 ஆண்​டு​கள் தாமத​மாகின.

    கடந்த 1988-ம் ஆண்​டில் பஞ்​சாபின் அமிர்​தசரஸில் உள்ள பொற்​கோயி​லில் காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நுழைந்​தனர். ஏற்​கெனவே கடந்த 1984-ம் ஆண்​டில் நடத்​தப்​பட்ட புளூ ஸ்டார் ஆபரேஷ​னால் பொது​மக்​கள் கடும் அதிருப்​தி​யில் இருந்​தனர். எனவே அது​போன்ற நடவடிக்​கையை மத்​திய அரசு எடுக்க விரும்​ப​வில்​லை. எனவே காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அடக்​கும் பொறுப்பு அஜித் தோவலிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

    இதன்​படி பொற்​கோ​யிலுக்​குள் நுழைந்த தோவல், காலிஸ்​தான் தீவிர​வா​தி​களிடம் தன்னை பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்று அறி​முகம் செய்து கொண்​டார். காலிஸ்​தான் தீவிர​வா​தி​களோடு தங்​கியிருந்து அவர்​கள் குறித்த முழு​விவரங்​களை​யும் என்​எஸ்ஜி படைக்கு ரகசி​ய​மாக வழங்​கி​னார்.

    தோவல் வழங்​கிய தகவல்​களின் அடிப்​படை​யில் என்​எஸ்ஜி படை​யின் கமாண்டோ வீரர்​கள், தொலை​வில் இருந்து ஒவ்​வொரு தீவிர​வா​தி​யாக சுட்​டுக் கொன்​றனர். இறு​தி​யில் காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள், இந்​திய ராணுவத்​திடம் சரண் அடைந்​தனர். இதற்​காக தோவலுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்​கப்​பட்​டது.

    கடந்த 1990-ம் ஆண்​டில் காஷ்மீர் தீவிர​வாதத்தை கட்​டுப்​படுத்த தோவல் அனுப்​பப்​பட்​டார். அப்​போது காஷ்மீரின் மிகப்​பெரிய தீவிர​வா​தி​யாக அறியப்​பட்ட குகா பாரேவை சந்​தித்த தோவல் அவரது மனதை மாற்​றி​னார். இதன்​காரண​மாக 1996-ம் ஆண்​டில் நடை​பெற்ற காஷ்மீர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் குகா பாரே போட்​டி​யிட்​டார். இதன்​மூலம் காஷ்மீரில் தீவிர​வாதம் ஓரளவுக்கு குறைந்​தது.

    கடந்த 1999-ம் ஆண்டு காந்​தஹார் விமான கடத்​தலின்​போது, தீவிர​வா​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​திய இந்​திய குழு​வில் தோவலும் இடம்​பெற்​றிருந்​தார். கடந்த 1999-ம் ஆண்டு கார்​கி​லில் பாகிஸ்​தான் ராணுவம் ஊடுரு​வியது. இதைத் தொடர்ந்து வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் உளவுத் துறை தலை​வ​ராக அஜித் தோவல் நியமிக்​கப்​பட்​டார்.

    மன்​மோகன் சிங் ஆட்​சிக் காலத்​தி​லும் உளவுத் துறை தலை​வ​ராக இருந்த தோவல் கடந்த 2005-ம் ஆண்​டில் ஓய்வு பெற்​றார். அப்​போது அவருக்கு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்​ராகிமின் மகள் திரு​மணம் 2005-ம் ஆண்டு துபா​யில் நடை​பெற்​றது. திரு​மணத்​தின்​போது தாவூதை கொலை செய்ய இந்​திய உளவுத் துறை திட்​ட​மிட்​டது.

    இந்த ஆபரேஷனுக்கு தோவல் வழி​காட்​டி​யாக செயல்​பட்​டார். இதன் ஒரு பகு​தி​யாக தாவூத்​தின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட விக்கி மல்​ஹோத்​ரா​வுடன் தோவல் நெருக்​க​மா​னார். இந்​திய உளவுத் துறை​யின் திட்​டத்தை அறிந்த தாவூத், மகளின் திரு​மணத்​தில் பங்​கேற்​க​வில்​லை.

    இறு​தி​யில் தோவலின் உதவி​யுடன் விக்கி மல்​ஹோத்ரா மட்​டும் கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார்​. அப்​போது முதல்​ அஜித்​ தோவல்​ தேசிய பாது​காப்​பு ஆலோசக​ராக செயல்​பட்​டு வருகிறார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?

    August 27, 2025
    தேசியம்

    கேரளா பல்கலை.யில் திருநங்கைகளுக்காக விடுதி திறப்பு

    August 27, 2025
    தேசியம்

    இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை –  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி

    August 27, 2025
    தேசியம்

    மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    August 27, 2025
    தேசியம்

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

    August 27, 2025
    தேசியம்

    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?
    • அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை: கோவாவில் உலகக் கோப்பை செஸ் தொடர்
    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
    • ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி அட்லர் காலமானார்
    • தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.