Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, October 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய விமானப் படை தளபதி தகவல்
    தேசியம்

    பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய விமானப் படை தளபதி தகவல்

    adminBy adminOctober 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய விமானப் படை தளபதி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் 10 போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரி​வித்​துள்​ளார்.

    பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்​மை​யில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய அவர், “கடந்த மே மாதம் இந்​தி​யா​வுடன் ஏற்​பட்ட போரின்​போது 7 இந்​திய போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம்’’ என்று தெரி​வித்​தார்.

    இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில் இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங் டெல்​லி​யில் நேற்று கூறிய​தாவது: இந்​திய போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று அவர்​கள் (பாகிஸ்​தான்) கனவு கண்​டால், அந்த கனவை நான் கலைக்க விரும்​ப​வில்​லை. அவர்​கள் தொடர்ந்து கனவிலேயே இருக்​கட்​டும்.

    இந்​தி​யா, பாகிஸ்​தான் போரின்​போது என்ன நடந்​தது என்​பது உலகத்​துக்கு தெரி​யும். சுமார் 90 மணி நேரம் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. இதில் பாகிஸ்​தான் பெரும் இழப்​பு​களை சந்​தித்​தது. போர் நீடித்​தால் பேரழிவை சந்​திக்க நேரிடும் என்​ப​தால் சண்டை நிறுத்​தத்தை அமல்​படுத்த அந்த நாடு மன்​றாடியது. பாகிஸ்​தான் ராணுவத்​தின் டிஜிஎம்ஓ இந்​திய ராணுவ அதி​காரியை நேரடி​யாக தொடர்பு கொண்டு பேசி​னார்.

    பாகிஸ்​தான் மீது போர் தொடுக்க வேண்​டும் என்​பது இந்​தி​யா​வின் நோக்​கம் கிடை​யாது. அந்த நாட்​டில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​களை அழிக்க வேண்​டும் என்​பதே எங்​களது குறிக்​கோள். அந்த குறிக்​கோளை வெற்​றிகர​மாக நிறைவேற்​றி​விட்​டோம். எனவே பொறுப்​புள்ள நாடு என்ற வகை​யில் பாகிஸ்​தானின் வேண்​டு​கோளை ஏற்று போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது.

    ரஷ்​யா, உக்​ரைன் இடையே மூன்​றரை ஆண்​டு​களுக்கு மேலாக போர் நீடித்து வரு​கிறது. இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் போர் நீடித்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் இந்​தி​யாவை முன்​மா​திரி​யாக கொண்டு உலக நாடு​கள் செயல்​படலாம். ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் விமானப் படைத் தளங்​கள், ராணுவத் தளங்​கள் தகர்க்​கப்​பட்​டன. அந்த நாட்​டின் 4 அதிநவீன ரேடார்​கள் மற்​றும் ஏவு​கணை தடுப்பு சாதனங்​கள் முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தானின் முரித், சாக்​லா​வில் செயல்​பட்ட 2 கட்​டுப்​பாட்டு அறை​கள், ஏராள​மான ராணுவ நிலைகள் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டன.

    வானில் பறந்து கொண்​டிருந்த பாகிஸ்​தானின் எப்​-16 (அமெரிக்க தயாரிப்​பு), ஜேஎப்​-17 (சீன தயாரிப்​பு) ரகங்​களை சேர்ந்த 4 முதல் 5 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இந்​திய எல்​லை​யில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலை​வில் பாகிஸ்​தான் வான்​பரப்​பில் பறந்த அதிநவீன உளவு விமானம் எஸ்​400 ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது.

    பாகிஸ்​தானின் முக்​கிய விமானப் படைத் தளங்​கள் மீது ஏவு​கணை​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இதில் விமானப் படைத் தளங்​களில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த எப்16 ரகத்தை சேர்ந்த 4 முதல் 5 போர் வி​மானங்​கள் தகர்க்​கப்​பட்​டன. வானில் 5, தரை​யில் 5 என பாகிஸ்​தானின்​ 10 போர்​ வி​மானங்​கள்​ அழிக்​கப்​பட்​டு உள்​ளன. இவ்​வாறு ராணுவ தளப​தி ஏ.பி.சிங்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜுபின் கார்க் மர்ம மரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை – அசாம் முதல்வர் அறிவிப்பு

    October 4, 2025
    தேசியம்

    பாடகர்  ஜுபின் கார்க் மரண வழக்கு: படகில் உடன் சென்ற 2 இசைக் கலைஞர்கள் கைது

    October 4, 2025
    தேசியம்

    உ.பி.யில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மசூதி, திருமண மண்டபம் இடிப்பு

    October 4, 2025
    தேசியம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் – ட்ரம்ப் முயற்சிக்கு மோடி வரவேற்பு

    October 4, 2025
    தேசியம்

    பிஹார் பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு

    October 4, 2025
    தேசியம்

    200 வகை துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை செய்த உ.பி. எம்எல்ஏ

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது: சீமான்
    • இந்த எளிய பிந்தைய உணவு மாலை வழக்கத்துடன் நீரிழிவு ஆபத்து | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஜய் கைது செய்யப்படுவாரா? – அமைச்சர் துரைமுருகன் பதில்
    • வெறும் 21 நாட்களில் 7 கிலோவை இழக்க: பிரபல டயட்டீஷியனின் 18-10-8-4-1 சூத்திரம் வைரலாகி வருகிறது-டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எச்1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.