Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ
    தேசியம்

    பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ

    adminBy adminJune 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் உட்பிரிவான The Resistance Front என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

    இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற மற்றும் 16 பேரைக் கடுமையாகக் காயப்படுத்திய கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகளில் ஒருவர் பஹல்காமில் உள்ள பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர். மற்றொருவர், பஹல்காமில் உள்ள ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    தாக்குதலுக்கு முன்பு பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் ஹில் பார்க்கில் உள்ள ஒரு சிறிய வீட்டில், மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் தெரிந்தே அடைக்கலம் கொடுத்திருந்தனர். இருவரும் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை வழங்கி உள்ளனர். அவர்கள், துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 22ம் தேதி மதிய வேளையில், சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொலை செய்தனர். இதுவரை நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்று.

    1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 19 இன் கீழ் இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    தேசியம்

    மார்ச் 2026-க்குள் மாவோயிஸம் நாட்டிலிருந்து ஒழிக்கப்படும்: அமித்ஷா சூளுரை

    June 29, 2025
    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்
    • நாய்கள் மற்றும் பூனைகள்: எது புத்திசாலி? பதில் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொடைக்கானல் மலை கிராமத்தில் 21 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    • புல் மீது வெறுங்காலுடன் நடப்பதன் 7 நன்மைகள்
    • பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.