Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி – விமானப்படைத் தளபதி சந்திப்பு
    தேசியம்

    பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி – விமானப்படைத் தளபதி சந்திப்பு

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி – விமானப்படைத் தளபதி சந்திப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று (மே.4) சந்தித்தார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்த நிலையில் இன்று விமானப் படை தளபதியின் சந்திப்பு நடந்துள்ளது.

    இந்தச் சந்திப்பானது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் தலைமைத் தளபதி அணில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்துக்கு சில நாட்களுக்கு பின்னர் நடக்கிறது.

    முன்னதாக, ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, ஏப்.23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடந்தது. அதில், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களும், அதற்கு பின்னால் உள்ள சதிகாரர்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அரசு தெரிவித்தது.

    தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதிலடிக்கான நேரம், வழிமுறை, இலக்குகளைத் தீர்மானிப்பதற்கான முழு செயல்பாட்டுச் சுதந்திரத்தை அரசு, பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியது. அப்போது பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக பல்வேறு கட்சிகளும் உறுதி அளித்தன.

    பஹல்காம் கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்தநிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி எல்லை சோதனைச் சாவடி மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா இடைநிறுத்தம், வர்த்தகம் நிறுத்தம், இறக்குமதி தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது நினைவுகூரத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

    July 5, 2025
    தேசியம்

    வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    July 5, 2025
    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    July 5, 2025
    தேசியம்

    கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காதல் மற்றும் வாழ்க்கை குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் 10 மேற்கோள்கள்: அவை புத்திசாலித்தனமான உறவு உதவிக்குறிப்புகள்
    • 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?
    • தமிழ் மாநில பகுஜன் சமாஜ் – புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!
    • இந்த கோடையில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க 5 எளிதான பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.