Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதலின் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையிலும், காட்டுமிராண்டித்தனமாகவும் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா தனது பதிலடி உரிமையை பொருத்தமான மற்றும் விகிதாசார முறையில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    பாகிஸ்தானின் எந்தவொரு ராணுவ இலக்கும் தாக்கப்படவில்லை. அதேபோல், பொதுமக்களும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசும் இந்திய பாதுகாப்புப் படைகளும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கியுள்ளனர்.

    ஆனால், பாகிஸ்தான் இந்திய எல்லையின் சில பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள்தான் தாக்குதலைத் தொடங்கினர், நாம் அல்ல. நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்மில் யாரும் போரை விரும்பவில்லை. நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு முதலில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிகளைக் கீழே இறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு விரைவாகப் பழிவாங்கிய இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களை நான் பெருமையுடன் வணங்குகிறேன். அவர்களின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் துல்லியத்தால், நமது நாடு மன உறுதியுடன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், உலகம் நமது வலிமையையும் உறுதியையும் கண்டுள்ளது. நமது நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு, நமது ஆயுதப் படைகளுக்கு உறுதியாக ஆதரவளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    July 1, 2025
    தேசியம்

    தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    July 1, 2025
    தேசியம்

    65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    July 1, 2025
    தேசியம்

    வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

    July 1, 2025
    தேசியம்

    தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

    July 1, 2025
    தேசியம்

    பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.