Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்…” – காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்
    தேசியம்

    “பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்…” – காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்…” – காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: “பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்” என அந்தத் தாக்குதலில் கணவரை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், “பயங்கரவாதிகள் மதத்தைக் கண்டறிந்து பின்னர் மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. யாரையாவது நெருங்கிச் சென்று அவர்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? இது மிகவும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால், சிலர் இதுபோன்ற விஷயங்கள் நடந்ததாகக் கூறுகிறார்கள், மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள். எனவே, நாம் அது குறித்து பேச வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இத்தகைய பேச்சுகள் மூலம் தங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த புனேவைச் சேர்ந்த பிரகதி ஜக்தலே என்பவர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில், இவரின் கணவர் சந்தோஷ் ஜக்தேலேவும் ஒருவர். சம்பவம் நடந்தபோது அங்கே இருந்தவரான பிரகதி ஜக்தலேவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழப்பினர்.

    அதற்கு மிகுந்த வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தபடி பேசிய அவர், “தயவுசெய்து இந்தச் சம்பவத்தை அரசியலாக்காதீர்கள். எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடாதீர்கள். நாங்கள் அங்கே இருந்தோம். பயங்கரவாதிகள் என்ன சொன்னார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தாக்குதலின்போது அவர்கள் கூறியதை நாங்கள் ஏற்கெனவே பகிர்ந்துள்ளோம். நாங்கள் பயங்கரவாதத்தை அனுபவித்தோம். வெறுக்கத்தக்க வார்த்தைகளைக் கேட்டோம்.

    மனிதாபிமான அடிப்படையில் அனைத்து அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாட வேண்டாம். பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகே கொன்றார்கள். பயங்கரவாதத் தாக்குதல் எங்களை இன்னும் வேட்டையாடுகிறது. நான் கண்களை மூடும்போதெல்லாம், துப்பாக்கியை வைத்திருக்கும் ஒரு மனிதனைப் பார்க்கிறேன். என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. அதிர்ச்சி மிகவும் ஆழமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?

    July 19, 2025
    தேசியம்

    ‘என் குழந்தைகளை பராமரிக்க விழைகிறேன்’ – குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் முன்னாள் கணவர் கூறியது என்ன?

    July 19, 2025
    தேசியம்

    டிஆர்எஃப் குறித்த அமெரிக்க அறிவிப்பு இந்தியாவுடனான கருத்து இடைவெளியை குறைக்கும்: சசி தரூர்

    July 19, 2025
    தேசியம்

    ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி

    July 19, 2025
    தேசியம்

    இந்தியா மதச்சார்பற்ற நாடு; இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்: கிரண் ரிஜிஜு

    July 19, 2025
    தேசியம்

    ‘ட்ரம்ப் குறிப்பிட்ட அந்த 5 ஜெட் விமானங்கள் பற்றிய உண்மை என்ன?’ – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்
    • கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
    • கால்நடை மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!
    • விசிகவின் நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் இடைநீக்கம்: திருமாவளவன்
    • பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.