Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காமில் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்
    தேசியம்

    பஹல்காமில் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காமில் சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலரை உள்ளூர் காஷ்மீரிகள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிகின்றன.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உள்ளூரை சேர்ந்த மட்டக் குதிரை ஓட்டியும் ஒருவர். இவரைப் போல மட்டக் குதிரை ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட உள்ளூர் காஷ்மீரிகள் பலர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.

    இதற்காக அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளூர் காஷ்மீரிகளுக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. தாக்குதலில் காயம் அடைந்த ஒரு சிறுவனை சஜ்ஜாத் அகமது பட் என்ற காஷ்மீரி பல கி.மீ. தூரம் தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனால் அந்த சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சஜ்ஜாத் அகமது பட் கூறுகையில், “அந்த பயங்கர நாளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். குழந்தைகளும் பெண்களும் உதவிக்காக அலறிக் கொண்டிருந்தனர். சுற்றுலாப் பயணிகளும் என் குடும்பத்தவர்களே. அவர்களைக் காப்பாற்றுவது எங்கள் பொறுப்பு. அவர்களுக்கு குடிநீர் கொடுத்து பலரை எங்கள் மட்டக் குதிரைகளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்றார்.

    பைசரன் பள்ளத்தாக்கு குதிரை ஓட்டிகள் சங்கத்தின் தலைவர் ரெயீஸ் அகமது கூறும்போது, “தாக்குதலை அறிந்து நாங்கள் பைசரனை அடைந்தபோது, அதன் வாயிலில் ஒருவரின் உடலை கண்டேன். அதன் அருகிலிருந்த ஒரு பெண், ‘எனது கணவரைக் காப்பாற்றுங்கள்’ என அலறி துடித்தார். நாங்கள் அவரை ஆசுவாசப்படுத்தி வாயிலுக்கு வெளியே அழைத்துச் சென்றோம். அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று உறுதியளித்தோம்” என்றார்.

    மட்டக் குதிரை உரிமையாளர் அப்துல் மஜீத் கூறுகையில், “சம்பவம் நடந்தவுடன் உள்ளூர் மக்கள் உடனடியாக அங்கு சென்று சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என எங்கள் சங்கம் சார்பில் வாட்ஸ்அப் குழுவில் தகவல் பரவியது.

    இதைப் பார்த்து எங்களில் பலரும் அங்கு சென்று மீட்புப் பணியில் இறங்கினோம். எங்களுக்கு பிறகுதான் பாதுகாப்பு படையினரால் அங்கு வர முடிந்தது” என்றார்.

    தமிழ்நாட்டின் செஞ்சியிலிருந்து வந்த 6 பேர் கொண்ட குழுவினரையும் இவர்கள் காப்பாற்றி உள்ளனர். சம்பவம் நடந்த அதிர்ச்சியில் உடல்நலம் குன்றிய இருவரை மட்டக் குதிரையில் ஏற்றிக்கொண்டனர். மற்ற நால்வருக்கும் வழிகாட்டியபடி அடிவாரத்திலுள்ள விடுதிக்கு பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

    தாக்குதலின்போது ஒரு தீவிரவாதியின் துப்பாக்கியை உள்ளூர்வாசியான சையத் ஆதில் ஹுசைன் ஷா (28), பறிக்க முயன்றுள்ளார். இதனால், அவரும் 26 பேரில் ஒருவராக சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் மதம் குறித்து கேள்வி எழுப்பி பிறகு சுட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது பலருக்கு கோபம் ஏற்பட்டது. ஆனால் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியிருப்பது நெகிழ்ச்சியாக அமைந்து விட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகிழ்ச்சியான திருமணத்திற்கு 5 பழக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்
    • இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்
    • விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
    • ‘தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ – விஜய பிரபாகரன் கணிப்பு
    • முன்கூட்டியே திட்டமிடல் தேவையில்லாத பெங்களூரில் இருந்து ஒரு நாள் பயணங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.