Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘பள்ளங்கள் இயற்கையாக உருவாகின்றன’ – பெங்களூரு சாலைகள் குறித்து டி.கே.சிவகுமார் கருத்து
    தேசியம்

    ‘பள்ளங்கள் இயற்கையாக உருவாகின்றன’ – பெங்களூரு சாலைகள் குறித்து டி.கே.சிவகுமார் கருத்து

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பள்ளங்கள் இயற்கையாக உருவாகின்றன’ – பெங்களூரு சாலைகள் குறித்து டி.கே.சிவகுமார் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும், கனமழையாலும் அவை உருவாகின்றன’ என்று கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கூறினார்.

    பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் இங்கே இருக்கிறோம். பாஜக இதில் அரசியல் செய்கிறது; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இன்று மாலை, முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்துகிறார்.

    பள்ளங்கள் இயற்கையால் ஏற்படுகின்றன; யாரும் அவற்றை உருவாக்க விரும்பவில்லை. பெங்களூருவில் வாகனங்களின் அதிகரிப்பு, அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    நாங்கள் ஏற்கனவே 7,000 க்கும் மேற்பட்ட பள்ளங்களை நிரப்பிவிட்டோம், பெங்களூருவின் சாலைகளில் இன்னும் 5,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளன. பள்ளங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் ஆணையரிடம் கேட்டுள்ளோம்.

    இதில் பாஜக அரசியல் செய்வதை எங்களால் தடுக்க முடியாது. அவர்கள் சாலை மறியல் செய்யட்டும் அல்லது அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். தீர்வுகளைக் காண நாங்கள் இங்கே இருக்கிறோம். விருப்புரிமை என்னுடையதாக இருந்தாலும் கூட, அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கியுள்ளேன்.

    அந்த நிதியை கொண்டு பாஜக எம்எல்ஏக்கள் ஏன் பள்ளங்களை நிரப்பவில்லை? இப்போதும் கூட, பள்ளங்களை சரிசெய்ய ரூ.25 கோடியை ஒதுக்கியுள்ளோம். எனவே அவர்கள் தங்கள் வேலையைச் செய்யட்டும்” என்று கூறினார்

    முன்னதாக நேற்று, மோசமான சாலை உள்கட்டமைப்பு காரணமாக பெங்களூருவை விட்டு வெளியேறும் ஐடி நிறுவனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “அரசாங்கத்தை யாரும் அச்சுறுத்த முடியாது. யாரும் வெளியேறுவதை நான் தடுக்க மாட்டேன்.” என்று கூறியிருந்தார்.

    கர்நாடகாவின் மோசமான சாலை உள்கட்டமைப்பைக் கண்டித்து, செப்டம்பர் 24 ஆம் தேதி பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு மணி நேர சாலை மறியலில் ஈடுபடப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

    September 20, 2025
    தேசியம்

    மும்பையில் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு

    September 20, 2025
    தேசியம்

    “மோடியின் வாக்குத் திருட்டை நிரூபிக்கும் ஹைட்ரஜன் குண்டை விரைவில் வெளியிடுவேன்” – ராகுல் காந்தி

    September 20, 2025
    தேசியம்

    “இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” – எச்-1பி விசா விவகாரத்தில் மோடியை சாடிய ராகுல்

    September 20, 2025
    தேசியம்

    ‘இந்தியாவின் நிஜ எதிரி’ என்பது மற்ற நாடுகளை சார்ந்து இருப்பதுதான்: பிரதமர் மோடி

    September 20, 2025
    தேசியம்

    ரூ.1000 கோடியில் சபரிமலை ஐயப்பன் கோயில் சீரமைப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்
    • கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் ஆய்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குஜராத்தில் பானிபூரி கேட்டு பெண் தர்ணா: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
    • ஹாங்காங்கில் 2-ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு!
    • தனுஷ் படத்தை உறுதி செய்த ‘லப்பர் பந்து’ இயக்குநர்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.