Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு
    தேசியம்

    பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

    adminBy adminAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில், வைஷ்ணவி தேவி கோயில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 34 ஆகும்.

    டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை: டெல்லியில் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெய்த மழையின் அளவு மிகவும் அதிகமாகும், இது இயல்பை விட 60% அதிகம். கனமழையால் டெல்லி வழியாகப் பாயும் யமுனை நதியின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 204.61 மீட்டரை எட்டியது, தொடர்ந்து இரண்டாவது நாளாக யமுனை நதியின் நீர்மட்டம் 204.50 மீட்டரை தாண்டியுள்ளது.

    310 பேர் உயிரிழப்பு: இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால், இதுவரை 310 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பருவமழையால் சுமார் 2,450 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. செவ்வாயன்று பெய்த கனமழை, நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக இமாச்சல் மாநிலத்தின் 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மொத்தம் 584 சாலைகள் மூடப்பட்டன.

    10,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்: ஜம்மு-காஷ்மீரில், செவ்வாய்க்கிழமை காலை முதல் 24 மணி நேரத்தில் உதம்பூரில் 629.4 மிமீ மழையும், ஜம்முவில் 380 மிமீ மழையும் பெய்து புதிய மழைப்பொழிவு சாதனையை படைத்துள்ளது. அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் ஜீலம் நதி வெள்ள அபாய அளவை தாண்டி பாய்வதால், பல குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    ஜம்மு காஷ்மீர் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வழிவதாலும், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பல முக்கிய பாலங்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தாழ்வான பகுதிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் பகுதியில் செவ்வாய் மதியம் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் சகினா இட்டூ அறிவித்தார்.

    கனமழை பாதிப்புகளால் ஜம்மு மற்றும் கத்ரா நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் 58 ரயில்களை ரத்து செய்ய வடக்கு ரயில்வே உத்தரவிட்டது. அதே நேரத்தில் இப்பகுதியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் 64 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    ஆக.30 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: கனமழை காரணமாக பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபில், தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற அமைப்புகள் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர் தடுப்பணையின் கதவுகளைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 60 நீர்ப்பாசன அதிகாரிகளை விமானப்படை விமானம் மூலம் மீட்டது, அதே நேரத்தில் ஒரு அதிகாரியை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணாமக பஞ்சாபில் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 30 வரை அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சத்தீஸ்கரில் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 30 மாவோயிஸ்டுகள் சரண்

    August 28, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

    August 28, 2025
    தேசியம்

    தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர்

    August 28, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    August 28, 2025
    தேசியம்

    “அரசியலமைப்பை காக்க குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்” – சுதர்சன் ரெட்டி

    August 28, 2025
    தேசியம்

    “நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் செப்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு
    • முடி வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெயைத் தவிர 5 செய்ய வேண்டிய விஷயங்கள்
    • புதுச்சேரி ஜிப்மருக்குப் புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்கார் நியமனம்
    • மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கக்கூடிய எளிய உணவு மாற்றம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல; பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.