Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி
    தேசியம்

    பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் என்ற தாலுகாவின் பெயர் பரசுராம்புரி என மாறுகிறது. மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

    உ.பி.யின் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாவட்டம் ஷாஜஹான்பூர். இதன் ஒரு தாலுகாவின் பெயர் ஜலாலாபாத். இதன் பெயரை மாற்றக் கோரிக்கைகள் எழுந்தது. இதை ஏற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஜுன் 27 இல் ஒரு கடிதம் எழுதியிருந்தது.

    இதை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம் உபியின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், உ.பி.யின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்ற அனுமதித்துள்ளது.

    உள்துறை அமைச்சகம் உ.பி. மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ’உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ’ஜலாலாபாத்’ நகரத்தின் பெயரை ’பரசுராம்புரி’ என மாற்றுவதற்கு இந்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.’ எனக் குறிப்பிட்டுள்ளது.

    உள்துறை அமைச்சகத்தின் இந்த ஒப்புதலுக்கு பிறகு, மத்திய அமைச்சரும் பிலிபித் பாஜக எம்பியுமான ஜிதின் பிரசாத் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அமைச்சர் ஜிதின் பிரசாத் தனது சமூக ஊடக தளத்தில், ’உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள ஜலாலாபாத்தின் பெயரை ‘பரசுராம்புரி’ என மாற்ற அனுமதி அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி, வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்! உங்கள் வழிகாட்டுதலிலும் தலைமையிலும் எடுக்கப்பட்ட இந்த முடிவு முழு சனாதன சமூகத்துக்கும் பெருமை சேர்க்கும் தருணத்தை அளித்துள்ளது.

    பரசுராமரின் பாதங்களில் லட்சக்கணக்கான வணக்கங்கள். உங்கள் அருளால்தான் இந்தப் புனிதப் பணியில் நான் ஊடகமாக மாற முடிந்தது. உங்கள் ஆசீர்வாதம் உலகம் முழுவதும் நிலைத்திருக்கட்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    உ.பி.யில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சி தொடர்கிறது. இது கடந்த 2017-ல் ஆட்சி அமைத்தது முதல் உபி நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் முஸ்லிம் பெயர்களில் பலவும் மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    September 14, 2025
    தேசியம்

    ‘இந்தியா vs பாக். ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது’ – ஹர்ஷ் கோயங்கா

    September 13, 2025
    தேசியம்

    இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: டெல்லியில் திரையிடும் கிளப்களுக்கு எச்சரிக்கை

    September 13, 2025
    தேசியம்

    பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்

    September 13, 2025
    தேசியம்

    “நேபாளத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு சுசீலா கார்கி வழிவகுப்பார்” – மோடி நம்பிக்கை

    September 13, 2025
    தேசியம்

    சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியாது: தேர்தல் ஆணையம்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
    • இந்திய கம்யூ. மாநில செயலாளராக வீரபாண்டியன் போட்டியின்றி தேர்வு
    • “இளையராஜா ஆடிய ஆட்டம் இருக்கே” – ரஜினிகாந்த் பகிர்ந்த ருசிகர சம்பவம்!
    • டெங்கு மற்றும் மலேரியா வெடிப்புகளுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா அதிகரிக்கிறது; யூனியன் சுகாதார அமைச்சகம் உயர்வான விழிப்புணர்வை வலியுறுத்தும் உத்தரவுகளை வெளியிடுகிறது – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குஜராத் எச்.சி சிக்கல்கள் முதல் சுற்று ஆலோசனைக்குப் பிறகு பி.ஜி. மருத்துவ சேர்க்கைகளில் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டு இடங்களை மாற்றுவதில் அறிவிப்பு | அகமதாபாத் செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.