Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பதற்றம் அதிகரிப்பு எதிரொலி: இந்தியாவை விட்டு வெளியேறும் பாகிஸ்தானியர்கள்
    தேசியம்

    பதற்றம் அதிகரிப்பு எதிரொலி: இந்தியாவை விட்டு வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பதற்றம் அதிகரிப்பு எதிரொலி: இந்தியாவை விட்டு வெளியேறும் பாகிஸ்தானியர்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி – வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, இவ்விஷயத்தில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

    இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்குள் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானிலிருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 1376 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

    மேலும் அவர், “பாகிஸ்தானுக்கு நேரடி விமானம் இல்லாததால், துபாய் அல்லது பிற வழித்தடங்கள் வழியாக பலர் விமானம் மூலம் வெளியேறியுள்ளனர். மாநில காவல்துறை மற்றும் பிற மத்திய நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் கண்டு வருவதால், அதிகமான பாகிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

    இதனிடையே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு உள்ளீடுகளை வழங்கும் ஆலோசனை அமைப்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை (NSAB) மத்திய அரசு புதுப்பித்துள்ளது. முன்னாள் R&AW தலைவர் அலோக் ஜோஷி, NSAB தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் விவகாரம்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று (ஏப்ரல் 30, 2025) பரிசீலிக்கும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்தவுடன் அதன் முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    தேசியம்

    சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

    June 28, 2025
    தேசியம்

    “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 28, 2025
    தேசியம்

    “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

    June 28, 2025
    தேசியம்

    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

    June 28, 2025
    தேசியம்

    ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.