Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.5 கோடி மோசடி: உ.பி.யில் 14 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது
    தேசியம்

    பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.5 கோடி மோசடி: உ.பி.யில் 14 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது

    adminBy adminAugust 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.5 கோடி மோசடி: உ.பி.யில் 14 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது.

    இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி மற்​றும் டீமேட் கணக்​கு​களின் பாஸ்​வேர்ட் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் கொடுத்துள்​ளனர்.

    இந்​நிலை​யில், ஒரு குறிப்​பிட்ட நாட்​களுக்கு மட்​டும் அவர்​களுக்கு லாபம் காட்​டப்​பட்​டுள்​ளது. அதன் பிறகு, அவர்​களை ஏமாற்றி வங்​கியி​லிருந்து தொகைகளை தமது வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு மோசடி நபர்​கள் மாற்றிக்கொண்​டனர்.

    தேசிய அளவில் புகார்: இதன் பிறகு ஏமாந்த முதலீட்​டாளர்​களின் செல்​போன் எண்​களை பிளாக் செய்​துள்​ளனர்.இது​போல் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் என்​சிசிஆர்​பி​யில் (தேசிய சைபர் கிரைம் புகார் தளம்) தமது புகார்​களை பதிவு செய்​துள்​ளனர். இது​போல் தேசிய அளவில் பதி​வாகும் புகார்​களை தரம் பிரித்து குற்​றச்​செயல்​கள் நடை​பெற்ற மாநிலங்​களுக்கு என்​சிசிஆர்பி அனுப்பி வைக்​கிறது.

    இந்த வகை​யில், உ.பி. மாநில காவல் துறைக்கு கிடைத்த 27 புகார்​களின்​படி, மோசடி தளம் வாராணசி​யாக இருந்​துள்​ளது. சுமார் ரூ.5 கோடி தொகை, பங்​குச்​சந்தை முதலீட்​டின் பெயரில் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால், வாராணசி சம்​பந்​தப்​பட்ட 27 புகார்​களை விசா​ரிக்க அந்​நகரக் காவல் துறைக்கு சைபர் பிரிவு அனுப்​பியது. இதற்​காக வாராணசி காவல் துறை​யின் துணை ஆணை​ய​ரான தமிழர் டி.சர​வணன் தலை​மை​யில் ஒரு படை விசா​ரணை​யைத்துவங்​கியது.

    90 வங்கி கணக்​கு​கள் முடக்​கம்: இப்​படை​யினர் நேற்று முன்​தினம், வாராணசி​யின் சிக்​ரா, சேத்​கஞ்ச் ஆகிய பகு​தி​களில் சோதனை நடத்​தினர். அப்​போது 2, 3 அடுக்கு மாடி வீடு​களில் இருந்த 14 பெண்​கள் உள்​ளிட்ட 43 பேர் கைதாகி உள்​ளனர். இந்த சம்பவத்​தில் இது​வரை சுமார் 90 வங்கி கணக்​கு​கள் முடக்​கப்​பட்​டுள்​ளன.

    இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் வாராணசி​யின் துணை ஆணை​யர் டி.சர​வணன் கூறும்​போது, ‘‘இந்த வழக்​கில் மேலும் 200 பேரைத் தேடி வரு​கிறோம். இது​வரை​ ரூ.33 லட்​சம் தொகை வங்​கி​களில் முடக்​கப்​பட்​டுள்​ளது. இந்த கும்​பலின் தலைவனாக, பல்​வேறு விருதுகள் பெற்ற பங்கு சந்தை நிபுண​ரான அம்​பர் மவுரியா உள்​ளார்.

    தலைமறை​வான அவரை தேடி வரு​கிறோம். இவர், 2 வருடங்​களாக பங்​குச்​சந்தை பயிற்சி எனும் பெயரில் இளம் பட்​ட​தா​ரி​களுக்கு வலை விரித்துள்ளார். இந்த 27 புகார்​களில் 4 தமிழ்​நாட்​டிலிருந்து செய்​யப்​பட்​டுள்​ளன. இந்தக் கும்​பல், தமிழ்​நாடு, கேரளா உள்ளிட்ட நாட்​டின் பெரும்​பாலான மாநிலங்​களில் மோசடி செய்​து உள்​ளது’’ என்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மதமாற்றத் தடை சட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 16, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது கமாண்டர் தகவல்

    September 16, 2025
    தேசியம்

    இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொல்கத்தாவில் போராட்டம்

    September 16, 2025
    தேசியம்

    டேராடூனில் மேகவெடிப்பு: உத்தராகண்ட் முதல்வரிடம் பாதிப்புகளை கேட்டறிந்த மோடி, அமித் ஷா

    September 16, 2025
    தேசியம்

    வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    September 16, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: விசாரணை அக்.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    September 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி
    • உயர் இரத்த அழுத்தம்: அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதி பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூறுகிறது: இயற்கையாகவே அதை எவ்வாறு குறைப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தகுதி வாய்ந்த ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
    • சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
    • இந்த ஈரானிய ஒப்பனை கலைஞர் தன்னை கஜோலாக மாற்றிக்கொண்டார், ரசிகர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாது! | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.