Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல்முறையீட்டை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதி கவாய் விலகல்
    தேசியம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல்முறையீட்டை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதி கவாய் விலகல்

    adminBy adminJuly 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீதிபதி யஷ்வந்த் வர்மா மேல்முறையீட்டை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதி கவாய் விலகல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் குற்றவாளி என கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு அமர்வை அமைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விசாரணையிலிருந்து விலகுவதாக தலைமை நீதிபதி கவாய் அறிவித்து உள்ளார்.

    நீதிபதி வர்மாவின் மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வர்மாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும். இதில் பல அரசியலமைப்பு கேள்விகள் அடங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். கபில் சிபலைத் தவிர, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி மற்றும் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவும் நீதிபதி வர்மாவுக்காக ஆஜராகி வருகின்றனர்.

    கபில் சிபலின் வாதத்தை தொடர்ந்து தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், “எனக்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவுடன் ஏற்கெனவே நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு தொடர்பாக நான் கலந்துரையாடி உள்ளேன். அவரை பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்துள்ளேன். எனவே, இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியான முடிவாக இருக்காது. அது முறையற்றதும் கூட. நாங்கள் ஒருமனதாக கூடி பேசி ஒரு சிறப்பு அமர்வு ஒன்றை அமைப்போம்” என்றார்.

    இதையடுத்து, நீதிபதி வர்மா மேல்முறையீட்டு வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் ஒரு சிறப்பு அமர்வை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர் நீதிபதியின் வீட்டிலிருந்து பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றினர்.

    இந்த விவகாரத்தில் நீதிபதி வர்மா குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவருக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கையை தொடங்குமாறு நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இந்த நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நீதிபதி வர்மா நாடியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

    July 25, 2025
    தேசியம்

    சோனியா தலைமையில் 3-வது நாளாக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

    July 25, 2025
    தேசியம்

    6 பாக். டிரோன்களை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்: ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்

    July 25, 2025
    தேசியம்

    இறந்தவர்களை பட்டியலில் அனுமதிக்க முடியாது: தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

    July 25, 2025
    தேசியம்

    அனில் அம்பானி குழுமத்தில் சோதனை: ரூ.3,000 கோடி மோசடி புகாரில் அமலாக்க துறை நடவடிக்கை

    July 25, 2025
    தேசியம்

    கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டாக்டர் பி.நம்பெருமாள்சாமி காலமானார்: தலைவர்கள் இரங்கல்
    • மெக்னீசியம் சிறுநீரக கற்கள் மற்றும் நாட்பட்ட நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 
    • மாநிலங்களவை எம்​.பி.​யாக இன்று முதல் கடமையை செய்யப் போகிறேன்: கமல்ஹாசன் பெருமிதம்
    • வாரத்திற்கு மூன்று முறை தலையை மசாஜ் செய்வது ஆரோக்கியத்தில் இந்த ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும், அவ்வாறு செய்வதற்கான சரியான வழி – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.