Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை
    தேசியம்

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெறுவது கடினம் என்ற சூழலில் கடந்த ஆண்டு தேர்வில் 67 பேர் 720 மதிப்பெண்களை பெற்றது சந்தேகங்களை எழுப்பியது.

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 40 வழக்குகள் தொடரப்பட்டன. “குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன” என்று தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “பிஹார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் ஆகிய பகுதிகளில் மட்டுமே முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதர பகுதிகளில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என்று தீர்ப்பளித்தது.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

    குறிப்பாக 14 மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 215 மாணவ, மாணவியரின் முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. விசாரணையின் முடிவில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கெனவே எம்பிபிஎஸ் படித்து வரும் 26 மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சிலருக்கு சட்டவிரோதமாக உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் 26 பேரும் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது முறைகேடுகள் செய்து சிக்கிய 42 மாணவ, மாணவியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டிருக்கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “தவறான ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டது” – பூபேஷ் பாகேல் விமர்சனம்

    September 23, 2025
    தேசியம்

    காசா மக்களுக்கு உதவுவதாக ரூ.5 கோடி வசூலித்த 3 பேர் கைது

    September 23, 2025
    தேசியம்

    பிரதமர் இல்லம் உள்ள சாலையிலும் பள்ளங்கள் உள்ளன; கர்நாடகாவையே பெரிதுபடுத்துகிறார்கள் – டி.கே. சிவகுமார்

    September 23, 2025
    தேசியம்

    உ.பி.யில் ஜாதி கூட்டங்களுக்கு தடை: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்

    September 23, 2025
    தேசியம்

    அரசியல் லட்சியங்கள் கிடையாது: லாலு மகள் ரோஹிணி கருத்து

    September 23, 2025
    தேசியம்

    நாகா தீவிரவாத அமைப்பு மீதான தடை 5 ஆண்டுக்கு நீட்டிப்பு

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரெபெக்கா ஜோன்ஸ் யார்? ஆண்டிஃபா பி.ஆர் தலைவர் சார்லி கிர்க் என்று அழைத்தார் ஒரு மோசமான நபர் இறுதியாக படுகொலைக்குப் பிறகு சென்றார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தை மோசமான நிதி சீரழிவுக்கு உள்ளாக்கிவிட்டது திமுக – அன்புமணி குற்றச்சாட்டு
    • இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க பெண் கட்டைவிரல் காயத்திற்கு சிகிச்சை பெறுகிறார்; மசோதாவைப் பெறுவதில் அதிர்ச்சியடைகிறார் – ‘நான் மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறேன் …..’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ்… சீனியர் இயக்குநர்களின் ‘கம்பேக்’ எப்போது? 
    • எப்படி இருக்கிறது திருமங்கலம் – வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை? | டிச.25-ல் திறப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.