Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? – பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை!
    தேசியம்

    நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? – பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை!

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிதிஷ் குமாருக்கு வழிவிடுகிறாரா ஜெகதீப் தன்கர்? – பிரதமரின் வாழ்த்து முதல் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் வரை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளில் நாட்டுக்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த கேள்விக்கு பாட்னாவில் பதில் அளித்த அமைச்சர் நீரஜ் குமார் சிங் பப்லு, “அது ஒரு நல்ல விஷயம். நிதிஷ் குமார் பதவியேற்றால் அதில் என்ன பிரச்சினை?” என தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜெகதீப் தன்கர் பதவி விலகியதற்கான காரணம் அவருக்கும், அரசாங்கத்துக்கும் மட்டுமே தெரியும். இது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது. அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதும், ஏற்க மறுப்பதும் அரசாங்கத்தின் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநிலங்களவையில் அலுவல் ஆலோசனைக் குழுவுக்கு ஜெகதீப் தன்கர் நேற்று மதியம் 12.30 மணிக்கு தலைமை தாங்கினார். இதில், அவைத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறிது நேரம் விவாதம் நடைபெற்றதை அடுத்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூடுவது என முடிவெடுக்கப்பட்டது.

    மாலை 4.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு ஜகதீப் தன்கர் தலைமையில் கூடியது. ஆனால், இதில் பங்கேற்க ஜே.பி. நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் வரவில்லை. அதுகுறித்த தகவலும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அவர், இன்று மதியம் 1 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை ஒத்திவைத்தார்.

    நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் வேண்டுமென்றே கலந்து கொள்ளாததற்கு ஏதோ தீவிரமான காரணம் இருக்கிறது. இதனால்தான், இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் குடியரசு துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை அவர் காரணமாக கூறியுள்ளார். அந்த காரணம் மதிக்கப்பட வேண்டும். ஆனால், அவர் ராஜினாமா செய்ததற்கு வேறு ஆழமான காரணங்கள் உள்ளன என்பது உண்மை.

    2014க்குப் பிந்தைய இந்தியாவை அவர் எப்போதும் பாராட்டி வந்தார். விவசாயிகளின் நலனுக்காகவும், நீதித்துறையின் பொறுப்புக்கூறல் மற்றும் கட்டுப்பாடு குறித்தும் அவர் அச்சமின்றி பேசிவந்தார். விதிமுறைகள், நெறிமுறைகளை கடைப்பிடிப்பவராக இருந்தார். ஆனால், அவர் தான் புறக்கணிக்கப்படுவதாக நம்பினார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா, அவருக்கு உரிய பாராட்டுக்களை அவருக்கு வழங்குகிறது. அதேநேரத்தில் அவரை குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தவர்களை மோசமாகப் பேசுகிறது.” என குறிப்பிட்டிருந்தார்.

    பாஜக எம்பி பகவத் கிஷண்ராவ் காரட், “குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர். தற்போது மருத்துவக் காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, “குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் நீண்ட ஆயுளுக்காக அவரை வாழ்த்துகிறேன். இருப்பினும், அவரது ராஜினாமா புரியாத புதிராகவே உள்ளது. தற்போது இந்த விவகாரம் மர்மமாக உள்ளது. அவர் ராஜினாமா செய்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அவர் தெளிவுபடுத்தினார் நன்றாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? – பாஜக+ Vs எதிர்க்கட்சிகள் பலம்

    July 22, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு

    July 22, 2025
    தேசியம்

    போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச்களில் எந்த பிரச்சினையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

    July 22, 2025
    தேசியம்

    ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன?

    July 22, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம்: அலுவல் ஆலோசனைக் குழு அறிவிப்பு

    July 22, 2025
    தேசியம்

    சிறையில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த உத்தரவு

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அவரது உலோகச் சங்கிலி காரணமாக மனிதன் எம்.ஆர்.ஐ இயந்திரத்தில் உறிஞ்சப்படுகிறான்: அல்ட்ராசவுண்ட், எக்ஸ் -ரே, எம்ஆர்ஐ மற்றும் சி.டி ஸ்கேன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும்போது ஒருவர் எடுக்க வேண்டும்
    • சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூலதன முன்னாள் கோப்: மியான்மர் பணிப்பெண்ணின் அபாயகரமான துஷ்பிரயோகத்திற்கு 10 ஆண்டுகள்; பாதிக்கப்பட்டவர் பட்டினி கிடந்தார், வெறும் 24 கிலோ – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அஜித்குமார் கொலை வழக்கு: மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக சாட்சிகளிடம் விசாரணை
    • 8 அறிகுறிகள் உங்கள் நாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் புறக்கணிக்கக் கூடாது என்று தவறு செய்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அவர்கள் வாழ்க்கையைப் பொருட்படுத்தாத விலங்குகளைப் போன்றவர்கள்’: 8 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றிற்காக அமெரிக்காவில் வைத்திருக்கிறார்கள்; இந்தியாவில் கொலைகளுடன் எஃப்.பி.ஐ கும்பலை இணைக்கிறது | சண்டிகர் செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.