Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நிதாரி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    தேசியம்

    நிதாரி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிதாரி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.​யின் நொய்​டா​வில் 31-வது செக்​டார் குடிசைப் பகு​தி​யில் ஏழைக் குடும்​பங்​களின் குழந்​தைகள் தொடர்ந்து காணா​மல் போயினர். அக்​டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்​பெண் காணா​மல் போய் வழக்கு பதி​வானது. பாயலின் கைப்​பேசி ஒரு ரிக் ஷா ஓட்​டுநரிடம் இருந்து போலீ​ஸாரிடம் சிக்​கியது.

    பிறகு இதனை அவருக்கு வழங்​கிய 31-வது செக்​டார் டி-5 பங்​களா​வின் பணி​யாளர் சுரேந்​தர் கோலி போலீ​ஸாரிடம் சிக்​கி​னார். விசா​ரணைக்கு பிறகு டி-5 பங்​களா வளாகத்​தி​லும் அதன் முன்​புள்ள கால்​வா​யிலும் டிசம்​பர் 2006-ல் தோண்​டப்​பட்​டது. இதனுள் ஒன்றன்​பின் ஒன்​றாக சடலங்​கள், எலும்​புக்​கூடு​கள், 26 மண்டை ஓடு​களும் வெளி​யாகி நாட்​டையே உலுக்​கின.

    இதன் காரண​மாக பங்​களா உரிமை​யாளர் மொஹீந்​தர் சிங் புந்​தேர் மீதும் புகார் எழுந்​தது. குழந்​தைகள், பெண்​களை கொலை செய்​ததுடன், சில உறுப்​பு​களை கோலி உட்​கொண்​ட​தாக​வும் விசா​ரணை​யில் தகவல் வெளி​யானது. இரு​வரும் கைது செய்யப்பட்டு 10 பெண்​கள் மற்​றும் 19 குழந்​தைகள் கொலை​யான​தாக வழக்​கு​கள் பதி​வாகின.

    வழக்​கு​களின் விசா​ரணை​யில் டி-5 பங்​களா​வின் பெரும்​பாலானப் பகு​தி​களை சிபிஐ உடைத்​துப் பார்த்​தது. குற்​ற​வாளி​களுக்கு பிரைன் மேப்​பிங், நார்​கோட்​டிக் உள்​ளிட்​டப் பலவகை விசா​ரணை​களை நடத்​தி​யது.

    இதன் முடி​வில், பணி​யாளர் சுரேந்​தர் கோலி, ஒரு மனநோ​யாளி எனவும், அவர் குழந்​தைகளை கொன்று அந்த உடல்​களு​டன் தவறான உறவு கொண்​ட​தாக​வும் தெரிய​வந்​தது. இதற்கு கோலி​யின் உரிமை​யாளர் உடந்​தை​யாக இருந்​த​தாக​வும் சிபிஐ தெரிவித்தது. 6 வழக்​கு​கள் மொஹீந்​தர் சிங் மீதும், 13 வழக்​கு​கள் கோலி மீதும் பதி​வாகின.

    இரு​வர் மீதான வழக்​கு​கள் காஜி​யா​பாத் சிபிஐ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றன. ஜுலை 2007-ல் வெளி​யான தீர்ப்​பில் இரு​வருக்​கும் மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டது. எனினும் மேல்​முறை​யீட்டு வழக்​கில் உ.பி.​யின் அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் அக்​டோபர் 2023-ல் இரு​வரை​யும் விடு​தலை செய்​தது. இவர்​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை நிரூபிக்க, போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என நீதிபதி​கள் கூறி​யிருந்​தனர்.

    இது தொடர்​பான சிபிஐ மற்​றும் உ.பி. அரசின் மேல்​முறை​யீட்டு மனுக்​களை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு தள்​ளு​படி செய்​துள்​ளது. இதனால் மொஹீந்​தர் சிங் புந்​தேர் அனைத்து வழக்​கு​களில் இருந்​தும் முழு​மை​யாக விடுவிக்​கப்​பட்​டார். சுரேந்​திர கோலி, மற்​றொரு வழக்​கில் இன்​னும் சிறை​யில் உள்​ளார்.

    இந்த வழக்​கில் சிபிஐ, உ.பி. போலீ​ஸாரின் புலனாய்வுகள் குறித்​தும் நீதி​மன்​றம் கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது. நிதாரி பங்களாவில் கண்​டெடுக்​கப்​பட்ட எலும்​புக்​கூடு​கள் தொடர்​பான குற்​ற​வாளி யார் என்​பது கேள்​வி​யாகி உள்​ளது. பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​கள் பெரும் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

    August 25, 2025
    தேசியம்

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலி பாலியல் வழக்குகளை தொடுத்த உ.பி. வழக்கறிஞருக்கு ஆயுள்

    August 25, 2025
    தேசியம்

    பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 2 பாகிஸ்தான் பெண்களின் பெயர்: விசாரணைக்கு மத்திய உள்துறை உத்தரவு

    August 25, 2025
    தேசியம்

    புகார் அளித்தவர் கைது: தர்மஸ்தலா வழக்கில் ‘திடீர்’ திருப்பமும், நீடிக்கும் மர்மமும்!

    August 25, 2025
    தேசியம்

    நானாக நான் இல்லை தாயே… தனது விமானத்தில் முதல் முறையாக வந்த தாயை கவுரவப்படுத்திய இண்டிகோ பைலட்

    August 25, 2025
    தேசியம்

    காசா பகுதி மக்களுக்காக நிதி வசூலித்த சிரியா நாட்டைச் சேர்ந்தவர் குஜராத்தில் கைது

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மக்கள் நலனை காப்பதில் தமிழகம் நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
    • சிறந்த தூக்கத்திற்கான தேதிகள் மற்றும் பூசணி விதைகள்: ஊட்டச்சத்து நிபுணர் ஆழமான, அமைதியான இரவுகளுக்கான மெக்னீசியம் நிறைந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
    • தெலுங்கில் அறிமுகமாகிறார் ரவீணா டாண்டன் மகள்!
    • ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.