Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘நான் அரசியல் செய்யவில்லை, நடவடிக்கை எடுத்துள்ளேன்’ – பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் சித்தராமையா பதில்
    தேசியம்

    ‘நான் அரசியல் செய்யவில்லை, நடவடிக்கை எடுத்துள்ளேன்’ – பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் சித்தராமையா பதில்

    adminBy adminJune 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘நான் அரசியல் செய்யவில்லை, நடவடிக்கை எடுத்துள்ளேன்’ – பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் சித்தராமையா பதில்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது குறித்து பேசிய சித்தராமையா, “அவர்கள் அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள். நான் இதில் அரசியல் செய்யவில்லை. வெளிப்படையாகப் பொறுப்பானவர்கள் மற்றும் தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று கூறினார்.

    இதற்கிடையில், கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மாநில அரசு அழுத்தம் கொடுக்கப்படும்போது மட்டுமே செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அவர், “நாங்கள் கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகுதான் ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, பெங்களூரு நகர காவல் ஆணையர் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐந்து அதிகாரிகளை முதல்வர் திடீரென பணியிடை நீக்கம் செய்தார்.

    உண்மையான குற்றவாளி முதல்வர் சித்தராமையா தவிர வேறு யாருமல்ல. 2-வது குற்றவாளி துணை முதல்வர் டி.கே.சிவகுமார். 3-வது குற்றவாளி உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா. அவர்கள் உண்மையிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

    ஜூன் 4 அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் ஆணையர் தயானந்தா உட்பட பல ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது.

    பெங்களூரு கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் விகாஷ், துணை காவல் ஆணையர் சேகர் எச்.டி, உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் கிரிஷ் ஏ.கே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங், பெங்களூரு நகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பஹல்காமில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் தீவிரவாதிகள்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன: பாதுகாப்புப் படை அதிகாரிகள்

    August 5, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு

    August 5, 2025
    தேசியம்

    ராகுல் காந்தி எல்லையில் முகாமிட்டு இருந்தாரா? – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; வழக்கின் முழு விவரம்

    August 5, 2025
    தேசியம்

    நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை

    August 5, 2025
    தேசியம்

    கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

    August 4, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை: பிரசாந்த் கிஷோர்

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
    • புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி: தேர்வு பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பாததால் தொடரும் குழப்பம்
    • ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ
    • பஹல்காமில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் தீவிரவாதிகள்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன: பாதுகாப்புப் படை அதிகாரிகள்
    • தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது: நீதிபதி வேதனை 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.