Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாட்டு நலனுக்காக பணிபுரிவது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி
    தேசியம்

    நாட்டு நலனுக்காக பணிபுரிவது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டு நலனுக்காக பணிபுரிவது கட்சி விரோத செயலா? – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: நாட்டு நலனுக்காக பணிபுரிவதை கட்சி விரோத செயல் என கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசி தரூர் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விமர்சனம் செய்திருப்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

    நாட்டு நலனுக்காக பணி புரிவதை கட்சி விரோத செயல் என சிலர் கருதுகின்றனர். அவர்கள் நம்மைவிட தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

    ஒரு முக்கியமான விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்பதை நான் நேர்மையாக உணர்கிறேன். இந்த தருணத்தில் தனி நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் எங்கள் கவனம் இப்போது மிகப் பெரிய மற்றும் முக்கியமான ஒரு பிரச்சினையில் உள்ளது.

    எனது நண்பர் (காங்கிரஸ் மூத்த தலைவர்) சல்மான் குர்ஷித் கூட சமீபத்தில், “இந்தியாவில் தேச பக்தராக இருப்பது அவ்வளவு கடினமா” என கேள்வி எழுப்பியதை நினைவுகூர்கிறேன்.

    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவேனா என கேட்கிறீர்கள். நான் தேர்தலில் வென்று எம்.பி.யாகி உள்ளேன். என்னுடைய பதவிக் காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடைபெற்றபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    இதுகுறித்த கேள்விக்கு சசி தரூர் கூறும்போது, “ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சாதாரணமானது. நாங்கள் ஒரு கட்சியின் அரசியல் நோக்கத்துக்காக இங்கு வரவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதிநிதிகளாக இங்கு வந்துள்ளோம்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை

    August 5, 2025
    தேசியம்

    கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

    August 4, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை: பிரசாந்த் கிஷோர்

    August 4, 2025
    தேசியம்

    திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம்

    August 4, 2025
    தேசியம்

    எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால் இனி விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்: கிரண் ரிஜிஜு

    August 4, 2025
    தேசியம்

    பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் 5 நாள் பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகை ரம்யாவுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது: பெங்களூரு போலீஸார் நடவடிக்கை
    • ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு
    • 10 மாவட்டங்களில் இன்று கனமழை
    • வெள்ளரி சாப்பிட்ட பிறகு நீங்கள் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது: செரிமான சிக்கல்களை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த ஆண்டு முதல்முறையாக பிஎட் சேர்க்கைக்கு இணைய வழியில் கலந்தாய்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.