Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு
    தேசியம்

    நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

    adminBy adminAugust 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்​தது. பாகிஸ்​தான் ராணுவம், நமது ராணுவ தளங்​கள், விமானப் படைத்தளங்கள்,வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் மக்​களை குறி​வைத்து ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் மூலம் மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​தி​யது.

    அனைத்து ஏவு​கணை​களும் ட்ரோன்​களும் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தா​னால் சிறிய சேதத்​தைக்​கூட ஏற்​படுத்த முடிய வில்​லை. வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் மருத்​து​வ​மனை​கள், ரயில்வே கட்​டமைப்​பு​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் பொது​மக்​கள் வசிக்​கும் பகு​தி​களுக்கு புதிய தொழில்​நுட்ப தளங்​கள் மூலம் முழு​மை​யான பாது​காப்பு வழங்​கப்​படும்.

    மகா​பாரத போர் நடந்​த​போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளியைத் தடுத்து பகலை இரவாக்​கி​னார். சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளி தடுக்​கப்​பட்​டது, அர்​ஜுனன், ஜெயத்​ரதனை கொல்ல எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடிந்​தது. இது சுதர்சன சக்​கரத்​தின் வலிமை ஆகும்.

    இதே​போல நாட்​டின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர திட்​டம் தொடங்​கப்​படும். இந்த சுதர்சன சக்​கரம் சக்​தி​வாய்ந்த ஆயுத அமைப்​பாக இருக்​கும், எதிரி​யின் தாக்​குதலை முறியடிப்​பது மட்​டுமல்​லாமல், எதிரியை பல மடங்கு அதி​க​மாகத் தாக்​கும் வலிமை​யைக் கொண்​டிருக்​கும்.

    சுமார் 50 ஆண்​டு​களுக்கு முன்பு நாட்​டில் அவசரநிலை அமல் செய்​யப்​பட்​ட​போது அரசி​யலமைப்பு சட்​டத்​தின் குரல்​வளை நெரிக்​கப்​பட்​டது. இதை ஒரு​போதும் மறக்​கக்​கூ​டாது. நாம் ஒன்​றிணைந்து அரசி​யலமைப்பு சட்​டத்தை வலுப்​படுத்த வேண்​டும்.

    வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டும். இதற்​காக யாருக்​கும் தலை​வணங்​கவோ, அடிபணி​யவோ மாட்​டோம். ஒன்​று​பட்டு கடின​மாக உழைப்​போம். வெற்றி இலக்கை எட்​டு​வோம்.ஏற்​கெனவே 4 செமி கண்​டக்​டர் ஆலைகளுக்கு அனு​மதி அளிக்​கப்​பட்டு உள்​ளது.

    புதி​தாக 6 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்​கப்பட உள்​ளன. இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட சிப்​கள், இந்த ஆண்டு இறு​திக்​குள் சந்​தை​யில் கிடைக்​கும்.புனல் மின்​சா​ரத்தை அதி​கரிக்க புதிய அணை​களைக் கட்டி வரு​கிறோம். பசுமை ஹைட்​ரஜன் திட்​டத்​துக்​காக ஆயிரக்​கணக்​கான கோடி ரூபாயை முதலீடு செய்து வரு​கிறோம். புதி​தாக 10 அணு உலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

    பெட்​ரோல், டீசல், எரி​வாயு இறக்​கும​திக்​காக பெரும் தொகையை செல​விட்டு வரு​கிறோம். இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண கடலுக்கு அடி​யில் எண்​ணெய் வளம், எரி​வாயு வளத்தை கண்​டறிய தேசிய ஆழ்​கடல் ஆய்​வுப் பணியை தொடங்க உள்​ளோம். கனிமங்​கள் வளத்தில் சுய​சார்பை எட்ட நாடு முழு​வதும் 1200 க்கும் மேற்​பட்ட இடங்​களில் அகழ்​வாய்வு பணி​கள் நடை​பெறுகின்றன.

    நமது குரூப் கேப்​டன் ஷுபான்ஷு சுக்லா அண்​மை​யில் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு சென்று திரும்​பி​னார். அடுத்த கட்​ட​மாக நமது வீரர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​துக்கு தயா​ராகி வரு​கிறோம். அடுத்து சொந்​த​மாக விண்​வெளி நிலை​யத்தை உரு​வாக்க பணி​யாற்றி வரு​கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ஆபரேஷன் சிந்தூர்: பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதலை நடத்​தினர். அதற்காக நடத்தப்பட்ட பதிலடிதான் ஆபரேஷன் சிந்​தூர். இதற்​காக ராணுவத்​துக்கு முழு சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டது. எதிரி​யின் தொலை​தூர பகு​தி​களில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​கள் தகர்க்​கப்​பட்​டன. இன்​றள​வும் பாகிஸ்​தான் தூக்​கமின்றி தவித்து வரு​கிறது.

    தீவிரவாதிகள் எங்​கிருந்​தா​லும் வேட்​டை​யாடப்​படு​வார்​கள். எதிரி​களின் அணு ஆயுத மிரட்​டல்​களுக்கு இந்​தியா ஒரு​போதும் அஞ்​சாது. ஒரு​வேளை எதிரி​கள் அணு ஆயுத தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தால் நமது ராணுவம் தகுந்​த பதிலடி கொடுக்​கும் என்று பிரதமர் மோடி தி்ட்டவட்டமாக கூறினார்​.

    3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்: இன்​றைய தினம் இளைஞர்​களின் நலனுக்​காக ரூ.1 லட்​சம் கோடி மதிப்​பிலான பிரதமரின் வேலை​வாய்ப்பு திட்​டம் தொடங்​கப்​பட்டுள்​ளது.

    இத்திட்​டத்​தின் கீழ் தனி​யார் துறை​யில் வேலை​வாய்ப்பு பெறும் ஒவ்​வொரு​வருக்​கும் அரசு சார்​பில் ரூ. 15,000 வழங்​கப்​படும். புதிய வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நிறு​வனங்​களுக்கு ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். சுமார் 3.5 கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும் என்று பிரதமர் மோடி உறு​தி​யளித்​தா​ர்​.

    ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்: சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது: 100 ஆண்​டு​களுக்கு முன்பு ராஷ்ட்​ரிய ஸ்வயம்​சேவக் சங்​கம் (ஆர்​எஸ்​எஸ்) நிறு​வப்​பட்​டது. அதன் தொண்​டர்​கள் ஒரு நூற்​றாண்டு கால​மாக தாய்​நாட்​டின் நலனுக்​காக வாழ்க்​கையை அர்ப்​பணித்து உள்​ளனர்.

    சேவை, அர்ப்​பணிப்​பு, ஒழுக்​கம் ஆகியவை அதன் அடை​யாளங்​கள். உலகின் மிகப்​பெரிய தன்​னார்வ தொண்டு அமைப்​பாக ஆர்​எஸ்​எஸ் செயல்​படு​கிறது. அதன் சேவைக்கு பங்​களித்த தொண்​டர்​களை​யும் வணங்​கு​கிறேன். ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் அர்ப்​பணிப்​புள்ள பயணத்​தில் தேசம் பெருமை கொள்​கிறது என்றார் பிரதமர் நரேந்திர மோடி.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சோதனை: ரூ.1.68 கோடி, 6.75 கிலோ தங்கம் பறிமுதல்

    August 16, 2025
    தேசியம்

    குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

    August 16, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டி அதிகபட்ச வரி 18% ஆக குறையும்: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கூறியது என்ன? – முழு விவரம்

    August 16, 2025
    தேசியம்

    சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புதின்: இந்தியா மரியாதைக்குரிய நாடு என புகழாரம்

    August 16, 2025
    தேசியம்

    உலகளவில் ஆபரேஷன் சிந்தூருக்கு இடம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

    August 16, 2025
    தேசியம்

    சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    • நீரிழிவு ஆபத்து குடும்பங்களில் இயங்குகிறது: ஒரு நபரின் ப்ரீடியாபயாட்டீஸ் முழு குடும்பத்திற்கும் ஆபத்தை எவ்வாறு குறிக்கலாம்
    • கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
    • ரோஸ் மற்றும் எஃப்.கே.ஏ கிளைகள் ஒன்றாக காட்சிகளை எடுத்து, அப்டிக்கு நடனமாடுகின்றன. பிளாக்பிங்கின் வெம்ப்லி டெட்லைன் டூர் ஷோவில் – வைரஸ் வீடியோவைப் பாருங்கள்
    • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.