Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது: போலி விசாவுக்கு 7 ஆண்டு சிறை
    தேசியம்

    நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது: போலி விசாவுக்கு 7 ஆண்டு சிறை

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது: போலி விசாவுக்கு 7 ஆண்டு சிறை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: புதிய குடியேற்ற சட்​டம் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்தியா​வுக்​குள் நுழைந்​தால் 7 ஆண்​டு​கள் சிறை, ரூ.10 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும். வெளி​நாட்​டினர் வரு​கையை முறைப்​படுத்த பாஸ்​போர்ட் சட்​டம்,வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம், வெளி​நாட்​டினர் சட்​டம், குடியேற்ற சட்​டம் போன்​றவை அமலில் இருந்​தன. அவை ஒன்​றிணைக்​கப்​பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்​கப்​பட்​டது.

    இந்த மசோதா கடந்த ஏப்​ரலில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. புதிய மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கடந்த ஏப்​ரலில் ஒப்​புதல் வழங்​கி​னார். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்ற சட்​டம் 2025 நாடு முழு​வதும் நேற்று அமலுக்கு வந்​தது.

    இதுகுறித்து சட்ட நிபுணர்​கள் கூறிய​தாவது: வெளி​நாட்​டின் வரு​கையை முறைப்​படுத்​தும் பல்​வேறு சட்​டங்​களை ஒன்​றிணைத்து புதிய சட்​டம் அமலுக்கு கொண்டு வரப்​பட்டு உள்​ளது. இதன்​படி போலி பாஸ்​போர்ட், போலி விசா மூலம் இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் வெளி​நாட்​டினருக்கு குறைந்​த​பட்​சம் 2 ஆண்​டு​கள் முதல் அதி​கபட்​ச​மாக 7 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​படும். மேலும் குறைந்​த​பட்​சம் ரூ.1 லட்​சம் முதல் அதி​கபட்​சம் ரூ.10 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.

    முறை​யான ஆவணங்​கள் இன்றி இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் வெளி​நாட்​டினருக்கு 5 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் ரூ.5 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும். இந்​தி​யா​வுக்கு சட்​ட​விரோத​மாக வெளி​நாட்​டினரை அழைத்து வரும் நிறு​வனங்​களுக்கு ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படும்.

    விசா காலம் முடிவடைந்த பின்​னரும் இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினர் குறித்து ஹோட்​டல்​கள், மருத்​து​வ​மனை​கள், பல்​கலைக்​கழகங்​கள், நிறு​வனங்​கள் கண்​டிப்​பாக குடியேற்ற அதி​காரி​களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். சுற்​றுலா பயணி​கள், மாணவர்​கள், தொழிலா​ளர்​கள், வணி​கர்​கள், அகதி​கள்​-பு​கலிடம் கோருபவர்​கள், சட்​ட​விரோதமாக குடியேறிய​வர்​கள் என 6 பிரிவு​கள் புதிய சட்​டத்​தில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளன. இந்த பிரி​வினருக்​கான விதி​கள், நிபந்​தனை​கள், தண்​டனை​கள் சட்​டத்​தில் விரி​வாக விவரிக்​கப்​பட்டு உள்​ளன.

    குறிப்​பாக பாகிஸ்​தானை சேர்ந்​தவர்​கள் இந்​தி​யா​வுக்கு வந்​தால் 24 மணி நேரத்​துக்​குள் பதிவு செய்து கொள்ள வேண்​டும். அவர்கள் தங்​கும் இடம், உள்​ளூர் தொடர்​பு​கள், இந்​தி​யா​வுக்கு வந்த நோக்​கம் உள்​ளிட்ட அனைத்து தகவல்​களை​யும் வழங்க வேண்​டும்.

    அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் சட்​ட​விரோத​மாக குடியேறு​பவர்​களை தடுக்க குடியேற்ற வி​தி​கள் கடுமையாக்​கப்​பட்டு உள்​ளன. இதே​போல இந்​தி​யா​வும் கடுமை​யான வி​தி​களு​டன் புதிய சட்​டத்தை அமல்​படுத்​தி உள்ளது. இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி

    September 2, 2025
    தேசியம்

    மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ”எங்களை வெளியேற்ற முயன்றால்…” – மனோஜ் ஜாரங்கி எச்சரிக்கை

    September 2, 2025
    தேசியம்

    மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: ஆசாத் மைதானத்தை காலி செய்ய மனோஜ் ஜாரங்கிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

    September 2, 2025
    தேசியம்

    ‘ஆந்திராவை ராம ராஜ்ஜியமாக கட்டியெழுப்புவோம்’ – சந்திரபாபு நாயுடு சூளுரை

    September 2, 2025
    தேசியம்

    20% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான மனு தள்ளுபடி

    September 2, 2025
    தேசியம்

    ​வி​நாயகர் சிலை ஊர்வல விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஃபெரிடின் சோதனை என்றால் என்ன, இது ஏன் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஸ்பின்னிங் செய்வோம்’: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா நாசாவின் மல்டி-அச்சு பயிற்சியாளர் மற்றும் விண்வெளி பயிற்சி குறித்து அரிய தோற்றத்தை அளிக்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஸ்டன் பிராமணர்கள் யார்? பீட்டர் நவரோவின் இந்தியா கருத்து சமூக ஊடக விவாதத்தைத் தூண்டுகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி
    • செப்.4-ல் ஓடிடியில் ‘கண்ணப்பா’ ரிலீஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.