Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தீவிரம்
    தேசியம்

    நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தீவிரம்

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால், சிறப்பு கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவடைகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, வக்பு சட்டத் திருத்த மசோதா, நிதி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அத்துடன் பல்வேறு துறை மானியங்களுக்கான விவாதமும் நடைபெற்றது.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள மழைக்கால கூட்டத் தொடரின்போது பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவும், அவற்றை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய மசோதாக்களும், சட்டத் திருத்த மசோதாக்களும் இவற்றில் அடங்கும். வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக இந்த மசோதாக்கள் இருக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், இந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது எம்.பி.க்களின் வருகைப் பதிவு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, எம்.பி.க்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் தங்களது வருகையை பதிவு செய்யலாம். இதன் மூலம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் வருகை வெளிப்படையாக இருக்கும்.

    அத்துடன், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அலவன்ஸ் தொகையில் முறைகேடுகள் நடப்பதையும் தடுக்க முடியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா, ஐஐஎம் திருத்த மசோதா, வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதா, புவி பாரம்பரிய இடங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, சுரங்கம் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு திருத்த மசோதா, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய போதை தடுப்பு திருத்த மசோதா, சரக்கு கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா, வருமான வரி மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிகிறது. இதை நீட்டிப்பதற்கான மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கோவா மாநிலத்தின் ஆளுநராகும் அரசரின் மகன்

    July 17, 2025
    தேசியம்

    பிராந்தியவாதத்தை ஊக்குவிப்பதும் ஆபத்து: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

    July 17, 2025
    தேசியம்

    ‘வீடுகளுக்கு 125 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை’ – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

    July 17, 2025
    தேசியம்

    பள்ளி பாடத்தில் பகவத் கீதை, ராமாயணம்: உத்தராகண்ட் மாநில அரசு கோரிக்கை

    July 17, 2025
    தேசியம்

    பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்

    July 17, 2025
    தேசியம்

    வேளாண், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களில் முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மெக்னீசியம் எண்ணெய் நன்மைகள்: ஒவ்வொரு இரவும் கால்களுக்கு மெக்னீசியம் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் 5 நன்மைகள்
    • கோவா மாநிலத்தின் ஆளுநராகும் அரசரின் மகன்
    • ஈராக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 50 பேர் பலியானதாக தகவல்!
    • தவெக கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    • முடி உதிர்தல்: அலோபீசியா அல்லது முடி உதிர்தலை மாற்றியமைக்க உதவும் வீட்டு வைத்தியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.