Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தேர்தலில் வாக்குகள் திருட்டு உண்மையென ராகுல் காந்தி உறுதிமொழி அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்
    தேசியம்

    தேர்தலில் வாக்குகள் திருட்டு உண்மையென ராகுல் காந்தி உறுதிமொழி அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேர்தலில் வாக்குகள் திருட்டு உண்மையென ராகுல் காந்தி உறுதிமொழி அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “ம​கா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மையென உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும் அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும்” என்று தேர்​தல் ஆணை​யம் எச்​சரித்​துள்​ளது. டெல்லியில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நேற்​று​முன்​தினம் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​னார்.

    அப்​போது மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்குமாறாக அதிகரித்துள்ளது.

    கர்​நாட​கா​வில் உள்ள ஒரு தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று பகிரங்​க​மாக குற்​றம்சாட்டி அவற்​றுக்கு சில ஆதாரங்​களை திரை​யிட்டு காட்​டி​னார். இதுதொடர்​பாக கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா மற்​றும் ஹரி​யானா மாநிலங்​களைச் சேர்ந்த தலைமை தேர்​தல் அதி​காரி​கள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளனர்.

    அதில் கூறியிருப்பதாவது: வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மை​தான் என சட்​டப்​படி உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும். அல்​லது அபத்​த​மான குற்​றச்​சாட்​டு​களை கூறி​விட்​டேன் என்று இந்த நாட்டு மக்​களிடம் ராகுல் காந்தி மன்​னிப்பு கேட்க வேண்​டும். இந்த 2 வாய்ப்​பு​கள்​தான் ராகுல் காந்​திக்கு உள்​ளது.

    மகா​ராஷ்டி​ரா, கர்​நாடகா வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு, வாக்​குப் பதி​வில் முறை​கேடு போன்​றவற்றை ராகுல் காந்தி நம்பினால், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திடு​வ​தில் அவருக்கு எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. அப்​படி அவர் கையெழுத்திட​வில்லை என்​றால், அந்த ஆய்வை அவர் நம்​ப​வில்லை என்​று​தான் பொருள். அந்த சூழ்​நிலை​யில் அவர் மன்​னிப்பு கேட்​டு​தான் ஆகவேண்​டும்.

    வாக்​காளர் பட்​டியலில் தவறு​தலாக சேர்க்​கப்​பட்ட பெயர்​களின் விவரங்​கள், தவறு​தலாக நீக்​கப்​பட்​ட​வர்​களின் பெயர் விவரங்​கள் அடங்​கிய உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட வேண்​டும். அதன்​பிறகு நாங்​கள் சட்​டப்​படி தேவை​யான நடவடிக்​கைகளை எடுப்​போம்.

    மேல்முறையீடு செய்யாதது ஏன்? – மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தின் கீழ் வாக்​காளர் பட்​டியல் வெளிப்​படை​யாக தயாரிக்கப்படு​கிறது. அந்த பட்​டியல் அரசி​யல் கட்​சிகளுக்கு வழங்​கப்​படு​கிறது. இந்த சூழ்​நிலை​யில், மகா​ராஷ்டி​ரா, கர்​நாடக மாநில வாக்​காளர் பட்​டியலில் தவறுகள் அல்​லது முறை​கேடு​கள் நடை​பெற்​றுள்​ள​தாக காங்​கிரஸ் கட்சி அப்​போது ஏன் மேல்​முறை​யீடு செய்​ய​வில்​லை.

    அவர் அபத்​த​மான குற்​றச்​சாட்​டு​களை கூறி வரு​கிறார். எனவே, உறு​தி​மொழி பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும். அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும். மேலும், ஜோடிக்​கப்​பட்ட ஆதா​ரங்​களை திரும்ப பெற வேண்​டும். இவ்​வாறு தலைமை தேர்​தல் ஆணை​யர்​கள் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. ராகுல் காந்தி கையெழுத்​திட்டு அளிக்க வேண்​டிய உறு​தி​மொழி பத்​திரத்​தின் மா​திரியை​யும்​ அவருக்​கு தேர்​தல்​ ஆணையம்​ அனுப்​பி வைத்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிப்ரவரி மாதம் கொண்டு வந்த வருமான வரி மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு

    August 9, 2025
    தேசியம்

    முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

    August 9, 2025
    தேசியம்

    நாடாளுமன்றத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பிய பாஜக எம்.பி ரவி கிஷண் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

    August 9, 2025
    தேசியம்

    வெல்டிங் கடையில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

    August 9, 2025
    தேசியம்

    அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்

    August 9, 2025
    தேசியம்

    டெல்லியில் கனமழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • க aura ரவ் குப்தாவின் நட்சத்திரம் நிறைந்த திருமண நிகழ்ச்சியில் ஜான்ஹ்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஸ்டன் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிப்ரவரி மாதம் கொண்டு வந்த வருமான வரி மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு
    • ’சிறை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • ரக்ஷா பந்தன் 2025: உடன்பிறப்பு செல்பி அல்லது இன ஓட் ஸ்லே? இந்த ராக்கி-தகுதியான பாடல்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் விளையாட்டை சமன் செய்யும்
    • முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.