Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்
    தேசியம்

    தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்

    adminBy adminSeptember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தெலங்கானா | டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு சித்ரவதை: பெண்ணை குக்கரால் அடித்துக்கொன்ற வேலையாட்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஹைதராபாத்: நகைகளை கொள்​ளை​யடிக்க 2 வேலையாட்​கள் தெலங்​கா​னா​வில் வீட்​டில் தனி​யாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலை​யும் செய்​தனர். ஹைத​ரா​பாத் போலீ​ஸார் 5 குழுக்​களை அமைத்து குற்​ற​வாளி​களை தேடும் பணி​யில் மும்​முர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

    ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் உள்ள ஒரு கேட்டட் கம்​யூனிட்டி (தொகுப்பு வீடு​கள்) பகு​தியை சேர்ந்​தவர் ராகேஷ். இவரது மனைவி ரேணு அகர்​வால். பல ஆண்​டு​களாக ஹைத​ரா​பாத்​தில் இவர்​கள் உருக்கு வணி​கம் செய்து வரு​கின்​றனர். இவர்​களுக்கு திரு​மண​மான ஒரு மகளும், கல்​லூரி​யில் படிக்​கும் ஒரு மகனும் உள்​ளனர்.

    இவர்​களது வீட்​டில் ஜார்க்​கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரோஷன் எனும் இளைஞர் பல ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கடந்த 11 நாட்​களுக்கு முன்​னர், தனக்கு உதவி​யாக அதே மாநிலத்​தைச் சேர்ந்த வர்ஷா எனும் நண்​பரை​யும் பணிக்கு சேர்த்​தார் ரோஷன். இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை ராகேஷ் கடைக்கு சென்று விட்​டார். மகனும் கல்​லூரிக்கு சென்று விட்​டார். வீட்​டில் ரேணு அகர்​வால் மட்​டும் தனி​யாக இருந்​தார்.

    அப்​போது மாலை 5 மணி​யள​வில், பணி​யாட்​களான ரோஷன் மற்​றும் வர்ஷா ஆகிய இரு​வரும், தனி​யாக இருந்த ரேணு அகர்​வாலை கட்டி போட்​டு, சரமாரி​யாக அடித்து உதைத்​துள்​ளனர். வீட்​டில் நகைகள், ரொக்​கப்​பணம் போன்​றவற்றை எங்​கெங்கு வைத்​துள்​ளீர்​கள் என்று கேட்டு கத்​தி​யால் ரேணு அகர்​வாலின் கை நரம்​பு​கள், கால் நரம்​பு​களை வெட்டி சித்​ர​வதை செய்​துள்​ளனர்.

    நகைகள், பணம் எல்​லாம் வங்கி லாக்​கரில் தான் வைத்​துள்​ளோம் என்று கூறி​யுள்ளார். அப்போது லாக்கரின் டிஜிட்டல் பாஸ்வேர்டு கேட்டு அவர்​கள் சித்ரவதை செய்துள்ளனர். கடைசி​யில், குக்​கரை எடுத்து ரேணு அகர்​வாலின் தலை​யில் சரமாரி​யாக தாக்கி உள்​ளனர். அதன்​பிறகு, கத்​தி​யால் கழுத்தை அறுத்து படு​கொலை செய்​துள்​ளனர்.

    அதன் பின்​னர், ரேணு அகர்​வால் அணிந்​திருந்த தங்க செயின், கம்​மல், வளை​யல், மோதிரம் போன்ற சுமார் 5 சவரன் நகைகளை கொள்ளை அடித்​ததோடு, பீரோ​வில் வைத்​திருந்த ரூ.1 லட்​சத்​தை​யும் கொள்ளை அடித்​தனர்.

    இதனை தொடர்ந்​து, ரத்த கறை படிந்த தங்​களின் உடமை​களை அங்​கேயே போட்​டு​விட்​டு, இரு​வரும் குளியல் அறை​யில் ரத்த கறை நீங்க குளித்து விட்​டு, மாற்று உடை அணிந்து கொண்​டு, தங்​களின் உடமை​களை எடுத்​துக்​கொண்டு ரேணு அகர்​வாலின் இருசக்கர வாக​னத்​திலேயே அங்​கிருந்து தப்பி தலைமறை​வாகி உள்​ளனர்.

    மாலை 7 மணி​யள​வில் ரேணு அகர்​வாலின் கணவர் ராகேஷ் கடை​யில் இருந்து வீட்​டுக்கு வந்து கதவை தட்டி உள்​ளார். கதவுவெகு நேர​மாக திறக்​கப்பட வில்​லை. இதனால் அங்​குள்ள ஒரு பிளம்​பரை அழைத்​து, வீட்​டின் பின்​புற ஜன்​னலை உடைத்​து, வீட்​டுக்குள் சென்று கதவை திறக்க சொன்​னார்.

    அதன்​படி செய்த பிளம்​பர், வீட்​டில் ரேணு அகர்​வால் ரத்த வெள்​ளத்​தில் கிடப்​ப​தாக கூறி​னார். உடனே கூகட்​பல்லி போலீ​ஸாருக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டது. அதன்​பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

    கண்​காணிப்பு கேம​ராக்​களை​ ஆய்வு செய்து பார்த்​த​தில் பணி​யாளர்​கள் இரு​வர்​தான் இந்த கொலையை செய்​தது என போலீஸார் தீர்​மானித்​தனர். இவர்​களை பிடிக்க 5 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக போலீஸ்​ அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கேரளாவில் பேரிடர் பாதித்த வயநாட்டில் பசுமை திறன் மேம்பாட்டை கற்பிக்கும் பள்ளிகள்

    September 13, 2025
    தேசியம்

    ட்ரம்பின் வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றச்சாட்டு

    September 13, 2025
    தேசியம்

    ‘இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல; மாற்றத்துக்கான உயிர்நாடி’ – பிரதமர் மோடி @ மிசோரம்

    September 13, 2025
    தேசியம்

    தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்

    September 13, 2025
    தேசியம்

    மோடி தாயாரின் ஏஐ வீடியோ: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

    September 13, 2025
    தேசியம்

    ‘நேபாள அமைதிக்கு இந்தியா உறுதுணை’ – சுசீலாவை வாழ்த்திய பிரதமர் மோடி உறுதி

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கேரளாவில் பேரிடர் பாதித்த வயநாட்டில் பசுமை திறன் மேம்பாட்டை கற்பிக்கும் பள்ளிகள்
    • கண்ணங்குடி அரசு பள்ளியை சிறப்பாக மாற்றிய தலைமை ஆசிரியருக்கு குவியும் விருதுகள்!
    • 50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
    • சென்னையில் 5-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்: வீட்டு வாடகை கூட தரமுடியவில்லை என வேதனை
    • பார்க்க சிறுசி… விலையோ பெருசு… கிலோ ரூ.200 ஆக உயர்ந்த சீரக சம்பா அரிசி விலை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.