Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி
    தேசியம்

    தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டுமென்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியளித்துள்ளார்.

    நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

    இந்த வழக்கில் திங்கள் கிழமையன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இதில் ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டனர்

    இந்த தீர்ப்பினை குடியிருப்பாளர் நலச் சங்கங்கள் வரவேற்றன. ஆனால் விலங்கு ஆர்வலர்கள் இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்தனர்.

    இந்த பிரச்சினை இன்று காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு எழுப்பப்பட்டது. தெருநாய்களை இடமாற்றம் செய்வதையும் கொல்வதையும் தடைசெய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பின்பற்றுமாறு உத்தரவிட்ட முந்தைய நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டுமென அவரிடம் முறையிடப்பட்டது.

    இதனையடுத்து, இந்த உத்தரவு குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பதிலளித்தார். இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

    உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, 2024 மே மாதத்தில் பிறப்பித்த உத்தரவில், “அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுவது அரசியலமைப்பு மதிப்பு” என்று குறிப்பிடப்பட்டது. மேலும், தெருநாய்களை கையாளுவது குறித்த சில வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

    தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நடிகர் ஜான் ஆபிரகாம் தலைமை நீதிபதிக்கு அவசர மேல்முறையீடு செய்தார். அதேபோல முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, “உச்ச நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு மாறானது. நிதி ரீதியாக சாத்தியமற்றது. இது சுற்றுச்சூழல் சமநிலைக்கு தீங்கு விளைவிக்கும்” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆக.15-ல் அனைத்து மசூதிகளிலும் தேசியக் கொடி: சத்தீஸ்கர் மாநில வக்பு வாரியம் உத்தரவு

    August 13, 2025
    தேசியம்

    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

    August 13, 2025
    தேசியம்

    “இது டீசர் மட்டுமே… இனிதான் மெ​யின் பிக்​சர்!” – ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தகவல்

    August 13, 2025
    தேசியம்

    கர்நாடக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட‌ ராஜண்ணாவின் ஆதரவாளர்கள் காங். மேலிடத்துக்கு எதிராக போராட்டம்

    August 13, 2025
    தேசியம்

    உ.பி.யின் பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? சர்ச்சை: இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்கு

    August 13, 2025
    தேசியம்

    ஆதார் ‘குடியுரிமை’க்கான ஆதாரம் அல்ல: நீதிமன்றங்கள் சொல்வது என்ன?

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சுதந்திர தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,000 போலீஸ்; கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம்
    • ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் சாப்பிடுவதை நிறுத்துங்கள்: இருதயநோய் நிபுணர் ஆல்கஹால், குச்சி அல்லாத பான்கள், மறைக்கப்பட்ட இதய அபாயங்கள் மற்றும் தடுக்க பிற உதவிக்குறிப்புகள் பற்றி எச்சரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆக.15-ல் அனைத்து மசூதிகளிலும் தேசியக் கொடி: சத்தீஸ்கர் மாநில வக்பு வாரியம் உத்தரவு
    • ‘அப்டேட்’ இல்லையெனில் ‘அவுட்டேட்’
    • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.