Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையின்போது சிறப்பு வேண்டுதல்!
    தேசியம்

    தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையின்போது சிறப்பு வேண்டுதல்!

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையின்போது சிறப்பு வேண்டுதல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தீவிரவாதத்தை ஒழிக்க வாராணசி மசூதிகளில் தொழுகையில் சிறப்பு வேண்டுதல் இடம்பெற்றது. இது, பாகிஸ்தானுக்கான பதிலடியில் நாடு முழுவதிலும் தொடரும் ஒற்றுமையாகக் கருதப்படுகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவம், நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் அப்பாவி மக்களைத் தேர்ந்தெடுத்து குறிவைத்து தாக்கினர்.

    இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக நாடு முழுவதும் கோபம் நிலவுகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகளும் பல இடங்களில் நடைபெறுகின்றன.

    அதற்கு ஓர் உதாரணச் சம்பவம் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி, கியான்வாபி மசூதி உள்ளது. ஜாமியா மசூதியான அதனுடன் சேர்த்து நகரின் அனைத்து மசூதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுபோன்ற, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளில் நாடு அல்லது உலக அளவில் நடைபெறும் சம்பவங்கள் முக்கிய இடம்பெறுவது வழக்கம்.

    இந்தவகையில், நேற்றைய சிறப்பு தொழுகையின் இறுதியில் அவர்களது இறைவனிடம் கேட்கப்பட்ட ‘துவா’ எனும் வேண்டுதலில் இருநாடுகளுக்கும் இடையிலானப் போர் இடம்பெற்றது.

    இந்தத் தொழுகையில், பங்கேற்ற ஏராளமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டினர். இத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான எல்லைப் போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கவும் துவா செய்திருந்தனர்.

    இந்தத் தொழுகையை முடித்து வெளியே வந்த முஸ்லிம்கள், மசூதிக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, அனைவரும் ஒரே குரலில், தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசினர்.

    இது குறித்து வாராணசி முஸ்லிம்கள் கூறுகையில், “தீவிரவாதத்துக்கு மதம் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கிறது.

    இந்த நாடு எதிர்காலத்தில் பஹல்காம் போன்ற கொடூரச் செயலில் மீண்டும் ஈடுபடாத வகையில் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது அவசியம். இதை தற்போது செய்து வரும் நம் நாட்டின் ராணுவம் தன் இலக்கில் வெற்றிபெற துவா செய்தோம்.” எனத் தெரிவித்தனர்.

    வாராணசி ஜாமியா மசூதியின் இமாமான மவுலானா முகம்மது அர்ஷத் பேசும்போது, “முஸ்லிம்களாகிய நாங்கள் எந்த வகையான வன்முறை, வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்.

    இஸ்லாம் அமைதிக்கான மதம், இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுடன் அதற்கு எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. பயங்கரவாதத்தைப் பரப்புபவர் இஸ்லாத்தின் எதிரிகள். அல்லாவின் தூதர் எப்போதும் அமைதி மற்றும் மனிதநேயத்தை போதித்தனர்.” எனத் தெரிவித்தார்

    இதேபோல் வாராணாசியின் முஸ்லிம்களின் மற்றொரு பிரிவான ஷியா மசூதிகளிலும் சிறப்பு துவா செய்யப்பட்டது. உ.பி.யில் இதர சில நகரங்களில் மசூதிகளிலும் தீவிரவாதத்தை ஒழிக்கவும், பாகிஸ்தானுடனானப் போரில் இந்தியா வெற்றி பெறவும் வேண்டப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘அஜித்குமார் கொலையில் சிசிடிவி ஆதாரம் அழிப்பு, நீதிபதிகள் அதிர்ச்சி…’ – வழக்கறிஞர் ஹென்றிடிபேன் விவரிப்பு
    • கர்நாடகாவில் உள்ள நந்தி ஹில்ஸ்: பெங்களூருவில் இருந்து இந்த அழகிய பயணத்திற்கு 5 காரணங்கள் பார்வையிடத்தக்கவை
    • “கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை
    • முடி வளர்ச்சிக்கு ஃபிட்காரியை எவ்வாறு பயன்படுத்துவது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.