Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»திருமணம் தொடர்பான வழக்குகளில் கணவன் – மனைவிக்கு இடையில் உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும் ஆதாரமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்
    தேசியம்

    திருமணம் தொடர்பான வழக்குகளில் கணவன் – மனைவிக்கு இடையில் உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும் ஆதாரமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்

    adminBy adminJuly 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருமணம் தொடர்பான வழக்குகளில் கணவன் – மனைவிக்கு இடையில் உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும் ஆதாரமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘‘கணவன் – மனை​விக்​குள் நடை​பெற்ற உரை​யாடல்​களை, ரகசி​ய​மாக பதிவு செய்​திருந்​தால் அவற்றை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்’’ என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான ஒரு வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது, மனைவி தன்னை சித்​ர​வதை செய்​வ​தாக கணவன் குற்​றம் சாட்​டி​னார். அதற்கு ஆதா​ர​மாக தொலைபேசி​யில் மனைவி பேசிய அனைத்​தை​யும் ரகசி​ய​மாக பதிவு செய்து அதை டிஸ்க்​கில் பதிவேற்​றம் செய்து சமர்ப்​பித்​தார். அந்த தொலைபேசி உரையாடல்​களை குடும்​பநல நீதி​மன்​றம் ஆதா​ர​மாக ஏற்​றுக் கொண்​டது.

    இதை எதிர்த்து மனைவி தரப்​பில் பஞ்​சாப் – ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. விசா​ரணை​யின் போது, ‘‘எனக்கு தெரி​யாமல் அல்​லது என்​னுடைய அனு​மதி இல்​லாமல் தொலைபேசி உரை​யாடல்​கள் ரகசி​ய​மாக பதிவு செய்யப்பட்​டுள்​ளன. இது என்​னுடைய அந்​தரங்​க​மான விஷ​யங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அடிப்​படை உரிமையை மீறு​வ​தாகும்’’ என்று மனைவி வாதாடி​னார்.

    இந்த வாதத்தை ஏற்​றுக் கொண்ட உயர் நீதி​மன்​றம், கணவன் அளித்த தொலைபேசி உரை​யாடல் ஆதா​ரத்தை ஏற்க முடி​யாது என்று உத்​தர​விட்​டது. அத்​துடன், கணவன் – மனைவி இடையே நடை​பெறும் உரை​யாடல்​களை ரகசி​ய​மாகப் பதிவு செய்​வது தனியுரிமையை மீறு​வ​தாகும். அது சட்​டப்​பூர்​வ​மாக நியாயப்​படுத்​தப்​பட​வில்லை என்று தீர்ப்​பளித்​தது.

    உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் கணவன் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்னா, சதீஷ் சந்​திர சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில் கூறிய​தாவது: கணவன் – மனைவி ஒரு​வரை ஒரு​வர் உளவு பார்ப்​பது திரு​மணம் வலு​வாக இல்லை என்​ப​தை​த்தான் காட்​டு​கிறது. எனவே, கணவன் மனை​விக்​குள் நடை​பெறும் உரை​யாடல்​களை ரகசி​ய​மாக பதிவு செய்திருந்​தால், திருமண வழக்​கு​களில் அதை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்.

    கணவன் – மனைவி இரு​வரும் உரை​யாடல்​களைப் பதிவு செய்​வது அவர்​களின் திரு​மணம் வலு​வாக இல்லை என்​ப​தற்​கான சான்றாகும், எனவே அதை நீதித்​துறை நடவடிக்​கை​களில் பயன்​படுத்​தலாம். இது​போன்ற உரை​யாடல்​களின் ரகசிய பதிவு​களை ஆதா​ர​மாக ஏற்​றுக் கொண்​டால் குடும்​பத்​தின் நல்​லிணக்​கம் கெடும். கணவன் – மனைவி உறவு பாதிக்​கும். உளவு பார்ப்​பதை ஊக்​கு​விப்​பது போலாகும் என்று கூறுகின்​றனர்.

    அத்​தகைய வாதம் ஏற்​கத்​தக்​கது என்று நாங்​கள் நினைக்​க​வில்​லை. திரு​மணத்​துக்​குப் பிறகு கணவன் – மனைவி ஒரு​வரை ஒருவர் உளவு பார்க்​கும் அளவுக்கு வந்​துவிட்​டால், அதுவே அவர்​களுக்​குள் பெரிய விரிசல் ஏற்​பட்​டுள்​ளது என்​ப​தற்​கான அறிகுறி. எனவே, பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றம், தொலைபேசி உரை​யாடல் விவரங்​களை ஆதா​ர​மாக கொண்டு வழக்கை தொடர்ந்து வி​சா​ரிக்​கலாம்​. இவ்​வாறு உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ தீர்​ப்​பளித்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!

    July 15, 2025
    தேசியம்

    114 வயது மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் ஃபவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு

    July 15, 2025
    தேசியம்

    திமுக, அதிமுக உட்பட பல கட்சிகளை சேர்ந்த 75 மாநிலங்களவை எம்.பி.க்கள் 2026-ல் ஓய்வு

    July 15, 2025
    தேசியம்

    ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!

    July 15, 2025
    தேசியம்

    மாங்காய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து ஆந்திராவில் 9 பேர் உயிரிழப்பு

    July 15, 2025
    தேசியம்

    இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

    July 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
    • மீண்டும் இணையும் ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு!
    • கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
    • சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு 10 எண்ணெய் இல்லாத தின்பண்டங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.