திருமலை: திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் எஸ்.வி.அன்னதானம், எஸ்.வி.பிராணதானம், எஸ்.வி.வித்யாதானம் உள்ளிட்ட அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பிராணதான அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் நேற்று ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். இதற்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பெற்றுக்கொண்டார். நன்கொடையாளருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.