Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கோவிட் தடுப்பூசியா: ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
    தேசியம்

    திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கோவிட் தடுப்பூசியா: ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கோவிட் தடுப்பூசியா: ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், “கோவிட்-க்குப் பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள், கோவிட் 19 தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக நிரூபித்துள்ளன. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) நடத்திய ஆய்வுகள், இந்தியாவில் உள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இவை மிகவும் அரிதாகவே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது”என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், “மரபியல், வாழ்க்கை முறை, ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மற்றும் கோவிட்-க்குப் பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் திடீர் மாரடைப்பு உயிரிழப்புகள் ஏற்படலாம். கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் கருத்துகள் தவறானவை. இவற்றுக்கான ஒருமித்த கருத்து கொண்ட ஆதாரங்கள் இல்லை என்பதை அறிவியல் நிபுணர்கள் மீண்டும் உறுதிசெய்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஷெபாலி ஜரிவாலா மரணம்: கடந்த வாரம் மும்பையில் மாரடைப்பால் காலமான நடிகை ஷெபாலி ஜரிவாலாவின் மரணம் சமீபத்தில் நாட்டையே உலுக்கியது. 42 வயதான ஷெபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியே காரணம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

    2020-ம் ஆண்டு முதல் மாரடைப்பு காரணமாக இளம் வயதினர் பலரின் திடீர் மரணங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கோவிட் தடுப்பூசிகள்தான் இத்தகைய திடீர் மரணங்களுக்கு காரணம் என்ற சந்தேகத்தையும் அவ்வப்போது சிலர் எழுப்பி வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பரில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    July 29, 2025
    தேசியம்

    இந்திய ஆட்சிப் பணியின் மத்திய சங்கத்தின் தலைவரானார் தமிழரான எஸ்.கிருஷ்ணன்

    July 29, 2025
    தேசியம்

    பிஹாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

    July 29, 2025
    தேசியம்

    ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்கிய மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் மோசடி: டெல்லியில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் கைது

    July 29, 2025
    தேசியம்

    உ.பி.யில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர் பட்டியலில் ஆதித்யநாத் முதலிடம்

    July 29, 2025
    தேசியம்

    கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள்
    • “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்து தனிமை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினர்” – ராஜேந்திர பாலாஜி கண்ணீர்
    • அந்நியன் விஷயங்கள்-கருப்பொருள் ஏர்பின்ப்: பைர்ஸ் வீட்டிற்குள் தலைகீழாக உயிருக்கு வரும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆளில்லா முதல் விண்கலம் டிசம்பரில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
    • உருவாகிறது  ‘குற்றம் கடிதல் 2’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.