Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தாய்லாந்து – கம்போடியா மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை
    தேசியம்

    தாய்லாந்து – கம்போடியா மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாய்லாந்து – கம்போடியா மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தாய்லாந்து – கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், ஏதேனும் சில காரணங்களால் அந்த பிரச்சினை தீவிரமடைவதும் பின்னர் தணிவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இரு நாட்டு எல்லையில் ராணுவ மோதல் நிகழ்ந்து வருகிறது. கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகள் மூலம் கம்போடியப் படைகள் குண்டுகளை வீசுவதாக குற்றஞ்சாட்டியுள்ள தாய்லாந்து ராணுவம், தங்கள் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

    இதனிடையே, இரு நாடுகளின் எல்லைகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறி வருகிறார்கள். தாய்லாந்தின் எல்லையில் வசிப்பவர்களில் 1.38 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில், பலர் அரசு ஏற்படுத்தி உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான மோதல் காரணமாக தாய்லாந்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 14 பேர் பொதுமக்கள் என்றும், ஒருவர் ராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்து ராணுவத்தின் தாக்குதல் காரணாக கம்போடியா எல்லையில் வசிக்கும் மக்களும் வெளியேறி வருகின்றனர். எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கம்போடிய நகரமான சாம்ராங்கில் இருந்து பலரும் பொருட்களுடன் வாகனங்களில் வேகமாக வெளியேறி வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

    தாய்லாந்தில் உள்ள கம்போடிய தூதரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட தாய்லாந்து அரசு, கம்போடியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாடுகளும் அமைதி காக்க அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

    இதனிடையே, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், “தாய்லாந்து – கம்போடியா எல்லைக்கு அருகிலுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்திற்குச் செல்லும் அனைத்து இந்தியப் பயணிகளும் TAT(Tourism Authority of Thailand) வெளியிடும் செய்திகளை அறிந்து முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தாய்லாந்தில் உள்ள உபோன் ரட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய 7 மாகாணங்களுகு்குச் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்

    September 9, 2025
    தேசியம்

    கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு

    September 9, 2025
    தேசியம்

    50 நாட்களாக மவுனம் காக்கும் ஜெகதீப் தன்கர் பேச வேண்டுமென நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ்

    September 9, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் மீண்டும் நியமனம்

    September 9, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – தொடங்கியது வாக்குப் பதிவு!

    September 9, 2025
    தேசியம்

    குல்காம் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யக்கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: ஐகோர்ட்
    • உங்கள் கிளி அழுத்தப்பட்டால் எப்படி சொல்வது: 6 எச்சரிக்கை அறிகுறிகள் ஒவ்வொரு உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்
    • ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணி: உதயநிதி தொடங்கி வைத்தார்
    • இமாச்சல பிரதேச கல்வியறிவு விகிதம்: இந்த மலை மாநிலம் “முழு கல்வியறிவு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது: கல்வி மற்றும் சுற்றுலா கலக்கும் ஒரு மைல்கல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.