Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை
    தேசியம்

    தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நாக்பூர்: தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில் அவர் இவ்​வாறு கூறி​யிருப்​பது பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளி​யீட்டு விழா நாக்​பூரில் 9-ம் தேதி நடை​பெற்​றது. ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கலந்​து​கொண்​டு, புத்​தகத்தை வெளி​யிட்​டார். விழா​வில் அவர் பேசும்​போது, ‘‘உங்​களுக்கு 75 வயது ஆகிறது என்​றால், நீங்​கள் ஒதுங்​கிக் கொண்டு மற்​றவர்​களுக்கு வழி​விட வேண்​டும்’’ என்​றார்.

    வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்​டிக்​காட்​டியே, மோகன் பாகவத் இவ்​வாறு கூறிய​தாக எதிர்க்​கட்​சிகள் தெரி​வித்​துள்​ளன. அவரது கருத்து பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடிக்கு செப்​டம்​பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது என்​பதை மோகன் பாகவத் மிக அழகாக நினை​வுபடுத்தி உள்​ளார். அதே​நேரம், மோகன் பாகவத்​துக்கு செப்​டம்​பர் 11-ம் தேதி 75 வயது ஆகிறது. இதே கருத்தை அவரிட​மும் பிரதமர் மோடி சொல்​லலாம். எப்​படியோ.. ஓர் அம்​பு, இரு இலக்​கு​கள்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

    கடந்த 2014 மக்​களவை தேர்​தலுக்கு பிறகு, பாஜகவில் 75 வயது ஆகும் தலை​வர்​களுக்கு ஓய்வு அளிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், மூத்த தலை​வர்​கள் அத்​வானி, முரளி மனோகர் ஜோஷி உள்​ளிட்​டோருக்கு ஓய்வு அளிக்​கப்​பட்​டது. குஜ​ராத் முதல்​வ​ராக இருந்த ஆனந்தி பென், மத்​திய அமைச்​சர​வை​யில் இருந்த நஜ்மா ஹெப்​துல்லா ஆகியோர் 75 வயதை எட்​டியதும் பதவியை ராஜி​னாமா செய்​தனர். கடந்த 2019 மற்​றும் 2024 மக்​களவை தேர்​தலின்​போது 75 வயதை எட்​டிய தலை​வர்​களுக்கு பாஜக​வில் சீட் வழங்​கப்​பட​வில்​லை.

    இந்த விவ​காரம் குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: கடந்த 2022-ல் பாஜக மூத்த தலை​வர் எடியூரப்​பா, கட்​சி​யின் தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக நியமிக்​கப்​பட்​டார். அப்​போது அவருக்கு 79 வயது. அவர் 75 வயதை தாண்​டிய பிறகும் கர்​நாடக முதல்​வ​ராக பதவி வகித்​தார். பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக 76 வயதான சத்​தி​ய​நா​ராயண் ஜாதியா நியமிக்​கப்​பட்​டார். 75 வயதில் ஓய்வு பெற வேண்​டும் என்று பாஜக​வில் அதி​காரப்​பூர்​வ​மாக எந்த விதி​யும் கிடை​யாது. வரும் 2029 மக்​களவை தேர்​தலிலும் மோடியே பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​படு​வார் என்று மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்ட பாஜக தலை​வர்​கள் ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி உள்​ளனர்​. இவ்​வாறுஅவர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

    September 12, 2025
    தேசியம்

    ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக பி.எப். பிராந்திய ஆணையர் கைது

    September 12, 2025
    தேசியம்

    இமாச்சலில் கன மழையால் சேதம் 577 சாலைகளில் போக்குவரத்து தடை

    September 12, 2025
    தேசியம்

    கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முடி வளர்ச்சிக்கான ரோஸ்மேரி எண்ணெய்: உண்மையில் வேலை செய்யும் இயற்கை தீர்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு
    • ஓமந்தூரார், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவு விண்ணப்பிக்க இன்று கடைசி
    • ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி தோல்வி
    • பட்டியலின ஊழியரை காலில் விழவைத்ததாக வெடித்த சர்ச்சை! – ஆளும் கட்சியினர் என்பதால் அடக்கிவாசிக்கிறதா போலீஸ்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.