Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது: கனிமொழி
    தேசியம்

    தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது: கனிமொழி

    adminBy adminAugust 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது: கனிமொழி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என்றும், இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, “இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். எனவேதான், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளன.

    இந்துத்துவ பின்னணி, ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஒருவரை அவர்கள் (பாஜக) குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளதால் நாங்கள் அதை எதிர்க்கிறோம். நாட்டில் பிளவை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புக்கும் நாடாளுமன்றத்துக்கும் எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. எனவேதான், அதற்கு பதிலளிக்கும் விதமாக அரசியலமைப்பின் மதிப்பீடுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய, நாட்டு மக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒருவரை நாங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.

    எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு போதிய அளவு பலம் உள்ளதா என கேட்கிறீர்கள். இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

    சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவராயிற்றே என கேட்கிறீர்கள். இந்த தேர்தல், தமிழருக்கு எதிராக தமிழர்கள் வாக்களிப்பதா என்பது பற்றியது அல்ல. இது ஒரு சித்தாந்த மோதல். எனவே, அதற்கும் மேலானது இது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதாலேயே பாஜகவுக்கு தமிழ்நாட்டின் மீது, தமிழ் மொழியின் மீது, தமிழ்நாட்டின் மதிப்பீடுகள் மீது, தமிழக மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்று அர்த்தமாகிவிடாது.

    தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை அவர்கள் இன்னமும் வழங்கவில்லை. இந்தி மொழியை திணிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, எங்கள் வரலாற்றையும் மாற்றி எழுத முயல்கிறார்கள். தமிழக மக்கள் மீது அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது? எதுவுமில்லை” என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கண் இமையில் பசையை ஊற்றி பள்ளி விடுதி மாணவர்கள் குறும்பு

    September 15, 2025
    தேசியம்

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி, நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை சம்மன்

    September 15, 2025
    தேசியம்

    காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

    September 15, 2025
    தேசியம்

    எல்லையில் மக்கள்தொகையை மாற்றும் சதியை முறியடிக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி

    September 14, 2025
    தேசியம்

    அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு

    September 14, 2025
    தேசியம்

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கண் இமையில் பசையை ஊற்றி பள்ளி விடுதி மாணவர்கள் குறும்பு
    • உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
    • ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் இருந்து நடிகர் நகுலை நீக்கியது ஏன்?
    • ஆர்.பி.உதயகுமார் தாயார் படம் திறந்துவைப்பு: மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பழனிசாமி
    • இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உயர் புரத உணவுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.