Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்
    தேசியம்

    தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

    adminBy adminAugust 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 45 சாலைத் திட்டங்கள் 1476 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறைவேற்றப்பட்டு வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர், இந்தத் திட்டங்கள் 48,172 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.

    மொத்தம் உள்ள 1,476 கிலோ மீட்டர் தொலைவிற்கான சாலைப் பணிகளில் 1,230 கிலோமீட்டருக்கான பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், பாரத் மாலா திட்டம் ஊரகப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சாலை தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும் அதன் வாயிலாக பொருளாதார மேம்பாடு, வர்த்தக பயன்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றிற்கு இந்த சாலைத் திட்டங்கள் பயனுள்ளதாக அமையும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

    நிலம் கையகப்படுத்துவது, சாலைக் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி தொடர்பான பிரச்சினைகள், கட்டுமான பொருட்கள், சந்தையில் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவை சில திட்டங்கள் தாமதமாவதற்கும் அதன் மதிப்பீடு அதிகரிப்பதற்கும் காரணங்களாக அமைந்திருக்கின்றன என்று அமைச்சர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்

    இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உதாரணமாக, நிலம் கையகப்படுத்தல் பணியை விரைந்து நிறைவேற்ற பூமி ராசி வலைதளத்தை அறிமுகம் செய்திருப்பதாகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளிலிருந்து விரைவாக ஒப்புதல் பெறுவதற்கு பரிவேஷ் வலைதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலமாக ஆன்லைன் வாயிலாக விரைந்து ஒப்புதல்களை பெற இயலும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் அந்த பதிலில் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிப்ரவரியில் அறிமுகமான வருமான வரி மசோதா வாபஸ்: ஆக.11-ல் புதிய மசோதா தாக்கல்

    August 8, 2025
    தேசியம்

    மகாதேவபுரா தொகுதி ‘வாக்கு திருட்டு’ ஓர் உதாரணம் மட்டுமே: பெங்களூரு பேரணியில் ராகுல் காந்தி பேச்சு

    August 8, 2025
    தேசியம்

    ‘வாக்கு திருட்டு’ சர்ச்சை: ராகுல் காந்தி தலைமையில் இன்று பெங்களூருவில் பேரணி

    August 8, 2025
    தேசியம்

    அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகளை விசாரிக்க தடை: உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்

    August 8, 2025
    தேசியம்

    இந்தியா பதிலடியாக அமெரிக்காவுக்கு 50% வரியை விதிக்க வேண்டும்: சசி தரூர்

    August 8, 2025
    தேசியம்

    பிஹார் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்த்தாண்டம் கிணற்று தண்ணீரில் பெட்ரோல், டீசல் கலந்ததால் பரபரப்பு
    • சர்வதேச பூனை நாள் 2025: பாரசீகத்திலிருந்து வங்காள பூனை வரை- உலகில் 5 மிக அழகான மற்றும் பிரபலமான செல்லப்பிராணி பூனை இனங்கள்
    • அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழிலாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்: இபிஎஸ் உறுதி
    • மக்கள் ஏன் குறட்டை விடுகிறார்கள்? அதன் காரணங்கள், அபாயங்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்களை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து, 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 முக்கிய அம்சங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.